ETV Bharat / bharat

கோவாக்சின் பலன் குறித்து முன்னரே தெரிவிக்கப்பட்டது - ஹரியானா அமைச்சர்

author img

By

Published : Dec 6, 2020, 6:13 PM IST

சண்டிகர்: கோவாக்சின் எப்போது பலன் அளிக்கும் என்பது குறித்து மருத்துவர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர் என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

கோவாக்சின்
கோவாக்சின்

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. மருந்தின் மூன்றாம்கட்ட சோதனையில், ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தன்னார்வலராக கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கிடையே, கோவாக்சின் மருந்தின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே அதன் பலன் கண்டறிப்படும் என அனில் விஜ்ஜுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் நேற்று தெரிவித்தார். இந்நிலையில், கோவாக்சின் எப்போது பலன் அளிக்கும் என்பது குறித்து மருத்துவர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர் என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முதல் டோஸ் அளிக்கப்பட்டு 28 நாள்களுக்குப் பிறகே அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகே, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும் எனவும் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அம்பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். நலமாக உள்ளேன்" என்றார்.

நவம்பர் 20ஆம் தேதி, விஜ்ஜுக்கு முதல் டோஸ் அளிக்கப்பட்டது. ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயால் சர்மா முதுகலை மருத்துவக் கல்லூரியில் மருந்து கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் மருத்துவர் புஷ்பா தஹியா இது குறித்து கூறுகையில், "முதல் டோஸ் போட்டுக்கொண்ட 42 நாள்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவதை 42 நாள்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டும். 42 நாள்களுக்கு பிறகே, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும்" என்றார்.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. மருந்தின் மூன்றாம்கட்ட சோதனையில், ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தன்னார்வலராக கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கிடையே, கோவாக்சின் மருந்தின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே அதன் பலன் கண்டறிப்படும் என அனில் விஜ்ஜுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் நேற்று தெரிவித்தார். இந்நிலையில், கோவாக்சின் எப்போது பலன் அளிக்கும் என்பது குறித்து மருத்துவர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர் என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முதல் டோஸ் அளிக்கப்பட்டு 28 நாள்களுக்குப் பிறகே அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகே, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும் எனவும் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அம்பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். நலமாக உள்ளேன்" என்றார்.

நவம்பர் 20ஆம் தேதி, விஜ்ஜுக்கு முதல் டோஸ் அளிக்கப்பட்டது. ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயால் சர்மா முதுகலை மருத்துவக் கல்லூரியில் மருந்து கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் மருத்துவர் புஷ்பா தஹியா இது குறித்து கூறுகையில், "முதல் டோஸ் போட்டுக்கொண்ட 42 நாள்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவதை 42 நாள்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டும். 42 நாள்களுக்கு பிறகே, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.