ETV Bharat / bharat

இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை... முதலாளியுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

author img

By

Published : Aug 30, 2022, 10:03 PM IST

பணி நிமித்தமாக செல்வதாகக்கூறி இளம்பெண்ணை ஹரித்வார் அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

haridwar
haridwar

ஹரித்வார்: டெல்லியைச் சேர்ந்த இளம்பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 27ஆம் தேதி, தனது முதலாளி அனில் தாகூர் உள்ளிட்ட சிலருடன் பணி நிமித்தமாக ஹரித்வார் சென்றுள்ளார். அங்கு அனைவரும் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு இரவு நேரத்தில் உணவு உண்ணும்போது, அனில் தாகூரும் அவரது நண்பர்களும் இளம்பெண்ணுக்கு மதுபானத்தை வற்புறுத்தி கொடுத்துள்ளனர்.

அதை குடித்ததும் இளம்பெண் மயங்கியுள்ளார். இதையடுத்து, அவளை அறைக்கு அழைத்துச் சென்று, அனில் தாகூரும், அவரது நண்பர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடிந்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிவித்து குடும்பத்தாரை ஹரித்வார் வரவழைத்த இளம்பெண், இதுதொடர்பாக கோட்வாலி ராணிபூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அனில் தாகூர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2021இல் தற்கொலைகள் 7.2% உயர்வு... முதலிடத்தில் மகாராஷ்டிரா... 2ஆவது இடத்தில் தமிழ்நாடு...

ஹரித்வார்: டெல்லியைச் சேர்ந்த இளம்பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 27ஆம் தேதி, தனது முதலாளி அனில் தாகூர் உள்ளிட்ட சிலருடன் பணி நிமித்தமாக ஹரித்வார் சென்றுள்ளார். அங்கு அனைவரும் தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு இரவு நேரத்தில் உணவு உண்ணும்போது, அனில் தாகூரும் அவரது நண்பர்களும் இளம்பெண்ணுக்கு மதுபானத்தை வற்புறுத்தி கொடுத்துள்ளனர்.

அதை குடித்ததும் இளம்பெண் மயங்கியுள்ளார். இதையடுத்து, அவளை அறைக்கு அழைத்துச் சென்று, அனில் தாகூரும், அவரது நண்பர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடிந்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிவித்து குடும்பத்தாரை ஹரித்வார் வரவழைத்த இளம்பெண், இதுதொடர்பாக கோட்வாலி ராணிபூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அனில் தாகூர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2021இல் தற்கொலைகள் 7.2% உயர்வு... முதலிடத்தில் மகாராஷ்டிரா... 2ஆவது இடத்தில் தமிழ்நாடு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.