ETV Bharat / bharat

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி? எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முன்னிறுத்த காங்கிரஸ் திட்டம்?

பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author img

By

Published : Jul 17, 2023, 6:19 PM IST

Rahul Gandhi
Rahul Gandhi

டெல்லி : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவராக உருவெடுத்து உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளில் சிறந்த தலைவராக ராகுல் காந்தி இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

கடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரைக்காக அவரை அனைவரும் பாராட்டியதாக வேணுகோபால் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி மாப்பிள்ளை அவதாரத்திற்கு தயாராக இருக்க வேண்டும் அனைத்து எதிர்க்கட்சிகளும் திருமண ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என அடுத்த பிரதமர் தேர்வு குறித்து மறைமுகமாக ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக பீகார் முதலமைச்சரும் ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தியும் கலந்து கொண்டு உள்ள நிலையில், அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிப்பதற்கான முன்னோட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாட்டு மிக முக்கியத் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்து உள்ளார் என்றும் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பு செயலாளர் சி.டி. மெய்யப்பன் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்மொழியப்படுவார் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தலைமைத்துவ பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்க துவங்கி உள்ளதாகவும், சீனாவின் எல்லை அத்துமீறல், மணிப்பூர் கலவரத்தில் அமைதி காப்பதில் தலைமைத்துவம் அமைதியாக இருப்பதாகவும், அரசியலமைப்பை பாதுகாப்பதே பிரச்சினையாக இருப்பதால் தான் 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் திரண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : நடுவானில் செல்போன் வெடித்ததால் பயணிகள் பீதி... ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

டெல்லி : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவராக உருவெடுத்து உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளில் சிறந்த தலைவராக ராகுல் காந்தி இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

கடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரைக்காக அவரை அனைவரும் பாராட்டியதாக வேணுகோபால் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி மாப்பிள்ளை அவதாரத்திற்கு தயாராக இருக்க வேண்டும் அனைத்து எதிர்க்கட்சிகளும் திருமண ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என அடுத்த பிரதமர் தேர்வு குறித்து மறைமுகமாக ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக பீகார் முதலமைச்சரும் ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தியும் கலந்து கொண்டு உள்ள நிலையில், அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிப்பதற்கான முன்னோட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாட்டு மிக முக்கியத் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்து உள்ளார் என்றும் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பு செயலாளர் சி.டி. மெய்யப்பன் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்மொழியப்படுவார் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தலைமைத்துவ பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்க துவங்கி உள்ளதாகவும், சீனாவின் எல்லை அத்துமீறல், மணிப்பூர் கலவரத்தில் அமைதி காப்பதில் தலைமைத்துவம் அமைதியாக இருப்பதாகவும், அரசியலமைப்பை பாதுகாப்பதே பிரச்சினையாக இருப்பதால் தான் 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் திரண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : நடுவானில் செல்போன் வெடித்ததால் பயணிகள் பீதி... ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.