ETV Bharat / bharat

மணிப்பூர் கலவரம்.. நடவடிக்கை என்ன? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!

author img

By

Published : Jun 20, 2023, 7:38 PM IST

மணிப்பூர் கலவர விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்க் கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன.

Modi
Modi

டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்க் கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், தலைநகர் இம்பாலை சுற்றி உள்ள மைதேயி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மைதேயி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என மலைவாழ் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. ஒன்றரை மாதங்கள் மேலாகியும் மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வீடுகளை இழந்த மக்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங் தெரிவித்து உள்ளார். இதனிடையே மணிப்பூரில் தொடரும் இனக் கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பிளவு மற்றும் ஆட்சி அரசியலால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மேலும், கலவரம் தொடர்பான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் மோதல்களைத் தவிர்த்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்ற வந்தபோதும் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்க் கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், தலைநகர் இம்பாலை சுற்றி உள்ள மைதேயி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மைதேயி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என மலைவாழ் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. ஒன்றரை மாதங்கள் மேலாகியும் மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வீடுகளை இழந்த மக்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங் தெரிவித்து உள்ளார். இதனிடையே மணிப்பூரில் தொடரும் இனக் கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பிளவு மற்றும் ஆட்சி அரசியலால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மேலும், கலவரம் தொடர்பான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் மோதல்களைத் தவிர்த்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்ற வந்தபோதும் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.