புதுடெல்லி: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலன்சார்ந்த 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதையடுத்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். முதலமைச்சர், ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு பொன்னாடை வழங்கி வாழ்த்தினார்.