ETV Bharat / bharat

நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அழைப்பு...!

author img

By

Published : Nov 17, 2022, 2:18 PM IST

நேபாள பொதுத் தேர்தலை சர்வதேச பார்வையாளராக காண வருமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை, நேபாள தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.

ராஜீவ் குமார்
ராஜீவ் குமார்

டெல்லி: அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களுக்கும் 7 மாகாண சட்டமன்றங்களில் உள்ள 550 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையிலான குழுவுக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி நேபாளம் செல்லும் இந்திய தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் குழுவின் தலைவராக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் குமார் தலைமையில் நேபாளம் செல்லும் இந்திய குழு 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நேபாள பொது தேர்தல் மற்றும் மாகாண தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Election Commissioner Rajiv Kumar invited by Election Commission of Nepal as International Observer for the forthcoming elections to Nepal’s House of Representatives and Provincial Assembly. Elections are scheduled in Nepal on 20th November, 2022.

    (File photo) pic.twitter.com/xVV7D1u534

    — ANI (@ANI) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குப்பதிவு மையங்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்வதன் மூலம் தேர்தல் நடத்தை முறைகளில் புதுமையை புகுத்த முடியும் என்றும், இதுபோன்ற திட்டம் இந்தியாவிலும் இருப்பதாகவும், பொதுத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களை பார்வையிட சர்வதேச பார்வையாளர்கள் அழைக்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!

டெல்லி: அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களுக்கும் 7 மாகாண சட்டமன்றங்களில் உள்ள 550 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையிலான குழுவுக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி நேபாளம் செல்லும் இந்திய தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் குழுவின் தலைவராக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் குமார் தலைமையில் நேபாளம் செல்லும் இந்திய குழு 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நேபாள பொது தேர்தல் மற்றும் மாகாண தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Election Commissioner Rajiv Kumar invited by Election Commission of Nepal as International Observer for the forthcoming elections to Nepal’s House of Representatives and Provincial Assembly. Elections are scheduled in Nepal on 20th November, 2022.

    (File photo) pic.twitter.com/xVV7D1u534

    — ANI (@ANI) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குப்பதிவு மையங்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்வதன் மூலம் தேர்தல் நடத்தை முறைகளில் புதுமையை புகுத்த முடியும் என்றும், இதுபோன்ற திட்டம் இந்தியாவிலும் இருப்பதாகவும், பொதுத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களை பார்வையிட சர்வதேச பார்வையாளர்கள் அழைக்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.