ETV Bharat / bharat

அதிகரிக்கும் கரோனா - ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டும் நெறிமுறைகள்

author img

By

Published : Jan 5, 2022, 10:02 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், லேசான அல்லது அறிகுறி இல்லாத கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் கரோனா
அதிகரிக்கும் கரோனா

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் ஆகியவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், லேசான அல்லது அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (ஜன.5) வெளியிட்டுள்ளது.

அதன்படி,’வீட்டுத்தனிமையில் இருக்கும் நோயாளிகள், தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாருக்கு கரோனா டெஸ்ட் தேவையில்லை?

அதன்படி மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லையென்றால் வெளியில் வரலாம். மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொது வெளியில் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். அதிகபட்சம் 8 மணி நேரம் தான் ஒரு முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு முறையாக அகற்றப்பட வேண்டும்.

வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிக்கு உதவும் நபரும் N-95 mask அணிந்து அவரைச் சந்திக்க வேண்டும். நோயாளிகள் நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள் முறையான பரிசோதனைக்குப் பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்படுவர்.

வீட்டுத்தனிமையில் யார் யார் இருக்கலாம்?

f

லேசான அல்லது அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டில் தனிமையில் இருந்தவாறே மருத்துவரின் அறிவுரைகளைப் பெறலாம். தொடர்ந்து காய்ச்சல், அல்லது வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நோயாளிகள் சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை நீராவி பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் குறையாமல், 100 டிகிரி அல்லது அதற்கும்மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்!

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் ஆகியவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், லேசான அல்லது அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (ஜன.5) வெளியிட்டுள்ளது.

அதன்படி,’வீட்டுத்தனிமையில் இருக்கும் நோயாளிகள், தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாருக்கு கரோனா டெஸ்ட் தேவையில்லை?

அதன்படி மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லையென்றால் வெளியில் வரலாம். மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொது வெளியில் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். அதிகபட்சம் 8 மணி நேரம் தான் ஒரு முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு முறையாக அகற்றப்பட வேண்டும்.

வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிக்கு உதவும் நபரும் N-95 mask அணிந்து அவரைச் சந்திக்க வேண்டும். நோயாளிகள் நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள் முறையான பரிசோதனைக்குப் பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்படுவர்.

வீட்டுத்தனிமையில் யார் யார் இருக்கலாம்?

f

லேசான அல்லது அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டில் தனிமையில் இருந்தவாறே மருத்துவரின் அறிவுரைகளைப் பெறலாம். தொடர்ந்து காய்ச்சல், அல்லது வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நோயாளிகள் சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை நீராவி பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் குறையாமல், 100 டிகிரி அல்லது அதற்கும்மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.