ETV Bharat / bharat

ராகுல் காந்தி பரப்புரை செய்தால் பாஜக வெற்றி பெறுவது உறுதி: யோகி ஆதித்யநாத்!

author img

By

Published : Oct 14, 2019, 8:23 AM IST

மும்பை: ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டால் பாஜக வெற்றி பெறுவது நூறு சதவிகிதம் உறுதி என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

rahul-gandhi

மகாரஷ்டிராவில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். உமர்கேட் பகுதியில் பாஜக வேட்பாளர் நமதேவ் சசானேவை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். ஜம்மு- காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததை தொடர்ந்து, 'ஒரே இந்ந்தியா, உயர்ந்த இந்தியா' என்ற கருத்தை பாஜக ஆட்சி உறுதிபடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மகாரஷ்டிராவில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டால் பாஜக வெற்றிப்பெறுவது நூறு சதவிகிதம் உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’நாமே துப்புரவாளராக மாற வேண்டும்’ - காந்தி வழியில் மோடி!

மகாரஷ்டிராவில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். உமர்கேட் பகுதியில் பாஜக வேட்பாளர் நமதேவ் சசானேவை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். ஜம்மு- காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததை தொடர்ந்து, 'ஒரே இந்ந்தியா, உயர்ந்த இந்தியா' என்ற கருத்தை பாஜக ஆட்சி உறுதிபடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மகாரஷ்டிராவில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டால் பாஜக வெற்றிப்பெறுவது நூறு சதவிகிதம் உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’நாமே துப்புரவாளராக மாற வேண்டும்’ - காந்தி வழியில் மோடி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.