ETV Bharat / bharat

திருமணம் தாண்டிய உறவால் நேர்ந்த விபரீதம்!

author img

By

Published : Jun 29, 2020, 2:49 PM IST

ஹைதராபாத் : திருமணம் தாண்டிய உறவு கொண்டிருந்த கணவனைக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Wife arrested for killing husband in Hyderabad, he involved  involved in Rs 500 crore scam
Wife arrested for killing husband in Hyderabad, he involved involved in Rs 500 crore scam

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மெலங்கே சுகன்யா (வயது 30). இவரது கணவர் மெலங்கே ஜான் பிரபாகரன் (வயது 50). இவர் முன்னதாக 500 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் ஆவார்.

கடந்த சில காலமாக ஹைதராபாத்தில் பிரபாகரன் வசித்து வந்த நிலையில், சுகன்யா கடந்த 15ஆம் தேதி பிரபாகரனுடன் சேர்ந்து வசிப்பதற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பிரபாகரன், சுகன்யாவை தன்னுடன் தங்க அனுமதிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த சுகன்யா, ஆத்திரத்தில் தனது கணவர் பிரபாகரனை கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டபோது, தனது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் சுகன்யா தெரிவித்துள்ளார். ஆனால், சுகன்யாவின் மீது தொடர்ந்து சந்தேகம் எழவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், பிரபாகரனின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வில் பிரபாகரனின் உடலில் பல தீக்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து சுகன்யாவிடம் விசாரித்த போது, தனது கணவரைக் கொன்றதாக சுகன்யா ஒப்புக்கொண்டார். குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து காவல் துறையினர் சுகன்யாவை கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த் ராவுக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மெலங்கே சுகன்யா (வயது 30). இவரது கணவர் மெலங்கே ஜான் பிரபாகரன் (வயது 50). இவர் முன்னதாக 500 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் ஆவார்.

கடந்த சில காலமாக ஹைதராபாத்தில் பிரபாகரன் வசித்து வந்த நிலையில், சுகன்யா கடந்த 15ஆம் தேதி பிரபாகரனுடன் சேர்ந்து வசிப்பதற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பிரபாகரன், சுகன்யாவை தன்னுடன் தங்க அனுமதிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த சுகன்யா, ஆத்திரத்தில் தனது கணவர் பிரபாகரனை கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டபோது, தனது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் சுகன்யா தெரிவித்துள்ளார். ஆனால், சுகன்யாவின் மீது தொடர்ந்து சந்தேகம் எழவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், பிரபாகரனின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வில் பிரபாகரனின் உடலில் பல தீக்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து சுகன்யாவிடம் விசாரித்த போது, தனது கணவரைக் கொன்றதாக சுகன்யா ஒப்புக்கொண்டார். குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து காவல் துறையினர் சுகன்யாவை கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த் ராவுக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.