மும்பை பதார் சாலையில் நபர் ஒருவர் காரில் ஒரு பெண்ணுடன் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த அந்நபரின் மனையி சாலையில் சென்ற தனது காரை வழிமறித்துள்ளார். மேலும், காரின் மேல் ஏறி தனது காலனியால் கார் கண்ணாடியைத் தாக்கியுள்ளார்.
சாலையின் நடுவே ஏற்பட்ட இச்சம்பவத்தைக் கண்ட காவல் துறையினர், காரைச் சேதப்படுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. அந்தக் காணொலி தற்போது வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க:சக்கர நாற்காலியில் மனைவி: பிச்சையெடுக்கும் வயதான தம்பதி!