வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்கவாசல் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் திறக்கப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ஏகாதேசி நாளான இன்று திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.