ETV Bharat / bharat

முடிவடைந்தது ட்ரம்ப் பயணம்: டெல்லி கலவரம் குறித்து அமெரிக்க தூதரகம் ஆலோசனை

author img

By

Published : Feb 27, 2020, 7:22 PM IST

டெல்லியில் வாழும் அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்க தூதரகம்
அமெரிக்க தூதரகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை முடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, டெல்லியில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

அதில், ”இந்தியாவில் இருக்கும் அமெரிக்க மக்கள் வடகிழக்கு டெல்லியில் வன்முறை ஆர்ப்பாட்டங்களின்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் அனைத்து பகுதிகளையும் தவிர்க்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், சாலை மற்றும் மெட்ரோ மூடல்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் குறித்த புதிய செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களை பார்க்க வேண்டியது அவசியம்.

முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானர்கள். மேலும் காவல் துறையினர் உட்பட காயமுற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவதைத் தடைசெய்யும் பிரிவு 144 விதிக்கப்படுவதை இந்த ஆலோசனைசுட்டிக் காட்டுகிறது.

முன்னதாக செவ்வாயன்று பிரதமர் மோடியுடனான முறையான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ட்ரம்ப் ஒரு மணி நேரம் தனியாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து வகுப்புவாத வன்முறை குறித்து கேட்கப்பட்ட போது ட்ரம்ப், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் உள் விவகாரம்’ என்று கூறி, சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், "நான் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. இது இந்தியா சம்பந்தப்பட்டது. அது அதன் மக்களுக்கு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன், ”என்றார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைக் குழுவுடன் பயணிக்கும் ஊடகவியலாளர்கள் டெல்லி கலவரத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கேட்டபோது எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மோடியை ‘மதரீதியான வலுவான தலைவர்’ என்று ட்ரம்ப் கூறினார். ‘முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து நீண்ட உரையாடலை பிரதமர் மோடியுடன் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், ‘நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம், பிரதமர் கணிக்க முடியாதவர் என்று நான் கூறுவேன், மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார். இந்தியாவில் அவர்கள் சிறந்த மத சுதந்திரம் பெற, மிகவும் கடினமாக உழைத்துள்ளனர்’ என்று அவர் என்னிடம் கூறினார் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை, வழக்கமான பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவின் முதல் குடும்பம் டெல்லியில் இருந்து டி.சி.க்கு பறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பார்வையிட்டார் . இந்த ஆலோசனை வேலை அல்லது சுற்றுலாக்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களை அதிக போக்குவரத்து அல்லது சாலை மூடல்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படும் இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறது. குறைந்தபட்ச சுயவிவரத்தை வைத்திருங்கள். உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். மேலதிக செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் பார்க்கவும். உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை முடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, டெல்லியில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

அதில், ”இந்தியாவில் இருக்கும் அமெரிக்க மக்கள் வடகிழக்கு டெல்லியில் வன்முறை ஆர்ப்பாட்டங்களின்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் அனைத்து பகுதிகளையும் தவிர்க்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், சாலை மற்றும் மெட்ரோ மூடல்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் குறித்த புதிய செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களை பார்க்க வேண்டியது அவசியம்.

முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானர்கள். மேலும் காவல் துறையினர் உட்பட காயமுற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவதைத் தடைசெய்யும் பிரிவு 144 விதிக்கப்படுவதை இந்த ஆலோசனைசுட்டிக் காட்டுகிறது.

முன்னதாக செவ்வாயன்று பிரதமர் மோடியுடனான முறையான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ட்ரம்ப் ஒரு மணி நேரம் தனியாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து வகுப்புவாத வன்முறை குறித்து கேட்கப்பட்ட போது ட்ரம்ப், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் உள் விவகாரம்’ என்று கூறி, சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், "நான் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. இது இந்தியா சம்பந்தப்பட்டது. அது அதன் மக்களுக்கு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன், ”என்றார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைக் குழுவுடன் பயணிக்கும் ஊடகவியலாளர்கள் டெல்லி கலவரத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கேட்டபோது எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மோடியை ‘மதரீதியான வலுவான தலைவர்’ என்று ட்ரம்ப் கூறினார். ‘முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து நீண்ட உரையாடலை பிரதமர் மோடியுடன் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், ‘நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம், பிரதமர் கணிக்க முடியாதவர் என்று நான் கூறுவேன், மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார். இந்தியாவில் அவர்கள் சிறந்த மத சுதந்திரம் பெற, மிகவும் கடினமாக உழைத்துள்ளனர்’ என்று அவர் என்னிடம் கூறினார் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை, வழக்கமான பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவின் முதல் குடும்பம் டெல்லியில் இருந்து டி.சி.க்கு பறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பார்வையிட்டார் . இந்த ஆலோசனை வேலை அல்லது சுற்றுலாக்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களை அதிக போக்குவரத்து அல்லது சாலை மூடல்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படும் இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறது. குறைந்தபட்ச சுயவிவரத்தை வைத்திருங்கள். உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். மேலதிக செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் பார்க்கவும். உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.