ETV Bharat / bharat

"காங்கிரஸ்தான் வேலை செய்யவிடவில்லை"

பாட்னா : பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை பணி செய்ய விடாமல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தடுத்து நிறுத்தியதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

author img

By

Published : Oct 23, 2020, 4:01 PM IST

மோடி
மோடி

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், சசராமில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தடுத்து நிறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி செய்தபோது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. அந்த இருண்ட காலத்திற்கு காரணமானவர்களை ஆட்சியில் அமரவைக்கக் கூடாது என மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.

நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டங்களில் நிதிஷ் கலந்துகொள்வார். பிகாரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். பத்து ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாதவர்கள் தற்போது கோபத்தில் உள்ளனர். நிதிஷ் குமாரை வேலைப் பார்க்க விடாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர்" என்றார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி

மறைந்த லோக் ஜனசக்தி பரிஷத் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது பரப்புரையை பிரதமர் மோடி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்த மாயாவதி; மாநிலங்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு?

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், சசராமில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தடுத்து நிறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி செய்தபோது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. அந்த இருண்ட காலத்திற்கு காரணமானவர்களை ஆட்சியில் அமரவைக்கக் கூடாது என மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.

நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டங்களில் நிதிஷ் கலந்துகொள்வார். பிகாரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். பத்து ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாதவர்கள் தற்போது கோபத்தில் உள்ளனர். நிதிஷ் குமாரை வேலைப் பார்க்க விடாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர்" என்றார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி

மறைந்த லோக் ஜனசக்தி பரிஷத் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது பரப்புரையை பிரதமர் மோடி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்த மாயாவதி; மாநிலங்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.