பஞ்சாப் மாநிலம், மாலர்கோட்லாவில் இனிப்புக்கடை நடத்தி வந்தவர் விஜய் குமார் ஜெயின்(40). இவருக்கு ஆஷா ஜெயின்(38) என்ற மனைவியும், சாஹில் ஜெயின்(13) என்ற மகனும் உள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில், விஜய் குமார் வீட்டிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, விஜய் குமார், அவரின் மனைவி, மகன் ஆகியோர் குண்டடிப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதிலிருந்த மருத்துவர்கள் சுடப்பட்ட மூவரையும் பரிசோதித்ததில், ஆஷா ஜெயின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
அமெரிக்க அதிபர்யா நான் - ஆங் அதுக்கு?
துரிதமாக மீதமுள்ள தந்தை மகனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் விஜய் குமாரின் உயிர் பிரிந்தது. பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் சாஹிலுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது..
சம்பவம் குறித்துப் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் சுமித் சூத், “குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நோக்கில், விஜய் குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு மனைவியையும், மகனையும் சுட்டுள்ளார். பின்னர் தானும் அதே துப்பாக்கியை கொண்டு சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனக் கூறினார்.