ETV Bharat / bharat

பல்பு வாங்கிய கங்கனா ரனாவத்...ட்விட்டர் அதிரடி!

author img

By

Published : Feb 4, 2021, 5:55 PM IST

டெல்லி: பிரபல பாடகர் ரிஹான்னா குறித்து வெறுப்பை தூண்டும் விதமான கருத்தை தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாடகர் ரிஹான்னா, மாடல் மியா கலிபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்பட பலர் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கிரிக்கெட்டர்கள், பாலிவுட் நடிகர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டனர்.

இதற்கிடையே, ரிஹான்னா குறித்து வெறுப்பை தூண்டும் விதமான கருத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டிருந்தார். சமூக வலைதள விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கூறி அந்த இரண்டு பதிவுகளை ட்விட்டர் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களுக்கு வகுக்கப்பட்ட வரையறைகளின் படி, விதிகளை மீறும் விதமான ட்வீட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ரிஹான்னாவை எலியோடு ஒப்பிட்டு கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கிரிக்கெட்டர் ரோகித் சர்மா குறித்த கங்கனா ரனாவத்தின் பதிவும் நீக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் நாட்டை பிரிக்க முயற்சி செய்வதாகவும் கங்கனா ட்விட்டரில் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாடகர் ரிஹான்னா, மாடல் மியா கலிபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்பட பலர் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கிரிக்கெட்டர்கள், பாலிவுட் நடிகர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டனர்.

இதற்கிடையே, ரிஹான்னா குறித்து வெறுப்பை தூண்டும் விதமான கருத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டிருந்தார். சமூக வலைதள விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கூறி அந்த இரண்டு பதிவுகளை ட்விட்டர் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களுக்கு வகுக்கப்பட்ட வரையறைகளின் படி, விதிகளை மீறும் விதமான ட்வீட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ரிஹான்னாவை எலியோடு ஒப்பிட்டு கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கிரிக்கெட்டர் ரோகித் சர்மா குறித்த கங்கனா ரனாவத்தின் பதிவும் நீக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் நாட்டை பிரிக்க முயற்சி செய்வதாகவும் கங்கனா ட்விட்டரில் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.