ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கூசு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக இன்று நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட பயங்கரவாதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள தாக்குதல்: 3 வீரர்கள் படுகாயம்!
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த பயங்கர தாக்குதலில் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
![புல்வாமாவில் பயங்கரவாதிகள தாக்குதல்: 3 வீரர்கள் படுகாயம்! force](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7922575-347-7922575-1594101393390.jpg?imwidth=3840)
கடந்த ஜுலை மாதம் 4ஆம் தேதி குல்காம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு வீரர் காயம் அடைந்தார். இதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற மோதலில் ஆறு வயது சிறுவன், துணை பாதுகாப்பு படை வீரர் ஆகியோரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். தென் காஷ்மீர் பகுதியில் ஜூன் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்புலமாக பயங்கரவாதியான ஸாஹித் தாஸ் என்பவர் இருந்தது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐக்கு மாறும் சாத்தான்குளம் வழக்கு
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கூசு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக இன்று நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட பயங்கரவாதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 4ஆம் தேதி குல்காம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு வீரர் காயம் அடைந்தார். இதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற மோதலில் ஆறு வயது சிறுவன், துணை பாதுகாப்பு படை வீரர் ஆகியோரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். தென் காஷ்மீர் பகுதியில் ஜூன் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்புலமாக பயங்கரவாதியான ஸாஹித் தாஸ் என்பவர் இருந்தது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐக்கு மாறும் சாத்தான்குளம் வழக்கு