ETV Bharat / bharat

ஊதியம் வழங்குவதில் இழுபறி - மருத்துவர்கள் போராட்டம்

author img

By

Published : Jul 7, 2020, 4:25 PM IST

டெல்லி: கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் டெல்லியிலுள்ள ராஜன் பாபு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

doctors protest
doctors protest

தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் ராஜன் பாபு என்னும் மருத்துவனையில் கரோனா காலத்தில் அயராது பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி, தினமும் காலை 11 மணி முதல் மதிய 12 மணிவரை ஒரு மணி நேரம் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "ராஜன் பாபு மருத்துவனையில் சுமார் 400க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

வேறு மருத்துவனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்க, நாங்கள் மட்டும் கடும் இழுபறிக்கு உள்ளாகியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எங்களுக்கு ஊதியம் தொடர்பான பிரச்னையே ஏற்பட்டதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியால் நாங்கள் ஊதியம் பெறுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பிரச்னை தொடருமானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

இதையும் பாருங்கள்: கரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா?

தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் ராஜன் பாபு என்னும் மருத்துவனையில் கரோனா காலத்தில் அயராது பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி, தினமும் காலை 11 மணி முதல் மதிய 12 மணிவரை ஒரு மணி நேரம் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "ராஜன் பாபு மருத்துவனையில் சுமார் 400க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

வேறு மருத்துவனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்க, நாங்கள் மட்டும் கடும் இழுபறிக்கு உள்ளாகியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எங்களுக்கு ஊதியம் தொடர்பான பிரச்னையே ஏற்பட்டதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியால் நாங்கள் ஊதியம் பெறுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பிரச்னை தொடருமானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

இதையும் பாருங்கள்: கரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.