தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் ராஜன் பாபு என்னும் மருத்துவனையில் கரோனா காலத்தில் அயராது பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, தினமும் காலை 11 மணி முதல் மதிய 12 மணிவரை ஒரு மணி நேரம் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "ராஜன் பாபு மருத்துவனையில் சுமார் 400க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.