ETV Bharat / bharat

நீதித் துறைக்கு சமூக வலைதளத்தால் ஆபத்து: சட்ட அமைச்சர் கவலை - சர்வதேச நீதித்துறை கருத்தரங்கு

டெல்லி: சமூக வலைதள கருத்துப் பரப்புரைகளால் நீதித் துறைக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது ஆபத்தானது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

RSP
RSP
author img

By

Published : Feb 22, 2020, 2:21 PM IST

சர்வதேச நீதித் துறை கருத்தரங்கு 2020 டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சர்வதேச நீதித் துறை சார்ந்த முன்னணி பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து வரவேற்கத்தக்கது. பொதுக்கருத்து என்பது முக்கியம். அதேவேலை, சட்ட உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் போக்கு தவறானது. கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்தியாவின் அடையாளத்தையே அழித்துவிடும்விதமாக அவை அமைந்துவிடக்கூடாது என்றார்.

மேலும், சிலர் சமூக வலைதளம் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு நீதித் துறையையும், நீதிமன்றங்களையும் விமர்சித்துவருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சமூக வலைதள பரப்புரை மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றனர். இது ஆபத்தான சூழலாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கும், ஊழல்காரர்களுக்கும் சாமானியர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் உரிமை என்ற அம்சம் செல்லாது எனத் தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், நீதித் துறையில் தற்போது பாலியல் சமநிலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சமநிலையைக் காத்துவரும் நீதித்துறை - பிரதமர் மோடி புகழாரம்

சர்வதேச நீதித் துறை கருத்தரங்கு 2020 டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சர்வதேச நீதித் துறை சார்ந்த முன்னணி பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து வரவேற்கத்தக்கது. பொதுக்கருத்து என்பது முக்கியம். அதேவேலை, சட்ட உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் போக்கு தவறானது. கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்தியாவின் அடையாளத்தையே அழித்துவிடும்விதமாக அவை அமைந்துவிடக்கூடாது என்றார்.

மேலும், சிலர் சமூக வலைதளம் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு நீதித் துறையையும், நீதிமன்றங்களையும் விமர்சித்துவருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சமூக வலைதள பரப்புரை மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றனர். இது ஆபத்தான சூழலாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கும், ஊழல்காரர்களுக்கும் சாமானியர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் உரிமை என்ற அம்சம் செல்லாது எனத் தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், நீதித் துறையில் தற்போது பாலியல் சமநிலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சமநிலையைக் காத்துவரும் நீதித்துறை - பிரதமர் மோடி புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.