ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர், என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

author img

By

Published : Jul 3, 2020, 10:28 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுவீழ்த்தப்பட்டார்.

Encounter
Encounter

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹ்ரா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதி சஹித் தாஸ் சுட்டுவீழ்த்தப்பட்டார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி சஹித் தாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர், ஜம்மு காஷ்மீர் காவலர், ஆறு வயது சிறுவன் என மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, சஹித் தாஸை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு பிஜ்பெஹ்ரா பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் சஹித் தாஸூக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சஹித் தாஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

மேலும், சஹித் தாஸூடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 45 நாள்களில் ஸ்ரீநகர் பகுதியில் மட்டும் மூன்று முறை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் என்கவுன்டர் நடைபெற்றுள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு மோடி திடீர் பயணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹ்ரா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதி சஹித் தாஸ் சுட்டுவீழ்த்தப்பட்டார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி சஹித் தாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர், ஜம்மு காஷ்மீர் காவலர், ஆறு வயது சிறுவன் என மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, சஹித் தாஸை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு பிஜ்பெஹ்ரா பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் சஹித் தாஸூக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சஹித் தாஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

மேலும், சஹித் தாஸூடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 45 நாள்களில் ஸ்ரீநகர் பகுதியில் மட்டும் மூன்று முறை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் என்கவுன்டர் நடைபெற்றுள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு மோடி திடீர் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.