ETV Bharat / bharat

கரோனா பாதிப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கிய தஞ்சாவூர் எம்.பி.யுடன் ஒரு உரையாடல்!

author img

By

Published : Mar 28, 2020, 10:03 AM IST

Updated : Mar 28, 2020, 10:15 AM IST

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எம்பிகளிலேயே அதிகபட்சமாக கரோனா பாதிப்புக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கரோனா பாதிப்பிற்கு அதிகமாக ஒதுக்கிய தஞ்சாவூர் மக்களவை உறுப்பினருடன் ஒரு உரையாடல்!
கரோனா பாதிப்பிற்கு அதிகமாக ஒதுக்கிய தஞ்சாவூர் மக்களவை உறுப்பினருடன் ஒரு உரையாடல்!

கரோனா பாதிப்பினை தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்கள் தங்களது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சை மக்களவை தொகுதிக்கு நான்கு கோடி ரூபாயும், திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதிக்கு கீழ் வரும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கோடி ரூபாயும் என மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்
தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்

இவ்வளவு பெரிய தொகை தஞ்சை தொகுதிக்கு எதற்காக என்ற கேள்வியோடு பழனிமாணிக்கத்தை தொடர்புகொண்ட நமது டெல்லி செய்தியாளருக்கு அளித்த பேட்டி இதோ...!

“தஞ்சாவூர் தொகுதிக்கு அதிக தொகை ஒதுக்கி உள்ள காரணத்தினால் இங்கு அதிக தொற்று இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உலக நாடுகளில் உள்ள தற்போதைய சூழலை உற்று கவனிக்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால்தான் நமது நாட்டில் இத்தகைய பிரச்னை தலைதூக்கியுள்ளது என்பது புரிகிறது.

சீனாவில் டிசம்பரில் ஆரம்பித்த இந்த நோய், மார்ச் மாதத்திலும் தொடர்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டு நாம் முன்கூட்டியே செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஆயிரம் பேரை தங்கவைத்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்ற வகையிலும், கண்காணிக்கின்றன வகையிலும் நாம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.

அதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவினை அளித்து அந்த காலக்கெடுவிற்குள் இந்தியாவிற்குள் வந்துவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் வெளிநாட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம்.

தஞ்சாவூர் மக்களவை உறுப்பினருடன் ஒரு உரையாடல்

அதேபோல இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரையும் ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்தத் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவிப்புகள் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தேவையிருந்திருக்காது.

தற்போது பார்த்தீர்களென்றால் ஒரிசாவை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பேருக்காக ஒரு மருத்துவமனை கட்டுகின்ற முயற்சியில் அந்த அரசு உள்ளது. இன்னும் நான்கு தினங்களில் அந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை பற்றி பேசும்போது அவர் கொஞ்சம் உற்சாகமாக குறைவாக செயல்படுவார் என்று பேசப்படும். ஆனால் அது உண்மை கிடையாது. அவர் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பார்.

1998ஆம் ஆண்டு ஒரு இடைத்தேர்தல் வந்தபோது அவருடைய செயல்பாடுகளை நான் உற்றுநோக்கி இருக்கின்றேன். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், செயல்களில் தீவிரமாக இருப்பார். அவர்கள் செயல்கள் நல்ல முடிவுகளை கொடுக்கும்.

இதுபோன்ற அனுபவங்களை பெற்றுள்ளதால், எதையும் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தற்பொழுது இந்த தொகையை ஒதுக்கி உள்ளேன்.

இதற்கு முக்கிய காரணம் எனது தொகுதியில் அதிகபட்சமான இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். எனவே, ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உபகரணம் இல்லை அந்த உபகரணம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

மருத்துவத்துறை வல்லுனர்கள் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு சில மாதங்களுக்குப் பிறகு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கணித்துள்ளனர்.

மருத்துவமனைகளுக்காக உபகரணங்கள் வாங்குவது எந்த காலத்திலும் ஒரு வீண் செலவாக இருக்காது. பிற்காலத்திலும் அது ஒரு பொருளாக இருந்து மக்களுக்கு சேவை அளிக்க உதவும். இது அழிந்து போகின்ற ஒன்றிற்காக செய்யப்படுகிற செலவும் இல்லை.

எனது தொகுதி நிதியிலிருந்து ஏற்கனவே நான் பரிந்துரை செய்திருந்த பணிகளுக்காக டெண்டர் விடுக்கப்படாமல் இருந்தது. எனவே, அந்த பணிகளை ரத்து செய்து அந்தத் தொகையையும் சேர்த்து இந்த கரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளேன்.

2020-21ஆம் ஆண்டிற்கான ஆண்டிற்கான மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உறுப்பினர்கள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பெற முடியும். எனவே நான் மட்டுமல்ல எல்லா தமிழ்நாடு உறுப்பினர்களும் அதிகமான நிதியினை இதற்காக ஒதுக்க முடியும்.

இன்னொன்று பணத்தைவிட உடல் நலமும் சுகாதாரமும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். எனவேதான் தற்பொழுது தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன்” என கூறினார்.

இதையும் படிங்க...குடும்ப உறவை வலுவாக்குங்கள் - கரோனா கொடுத்த பொன்னான வாய்ப்பு

கரோனா பாதிப்பினை தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்கள் தங்களது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சை மக்களவை தொகுதிக்கு நான்கு கோடி ரூபாயும், திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதிக்கு கீழ் வரும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கோடி ரூபாயும் என மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்
தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்

இவ்வளவு பெரிய தொகை தஞ்சை தொகுதிக்கு எதற்காக என்ற கேள்வியோடு பழனிமாணிக்கத்தை தொடர்புகொண்ட நமது டெல்லி செய்தியாளருக்கு அளித்த பேட்டி இதோ...!

“தஞ்சாவூர் தொகுதிக்கு அதிக தொகை ஒதுக்கி உள்ள காரணத்தினால் இங்கு அதிக தொற்று இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உலக நாடுகளில் உள்ள தற்போதைய சூழலை உற்று கவனிக்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால்தான் நமது நாட்டில் இத்தகைய பிரச்னை தலைதூக்கியுள்ளது என்பது புரிகிறது.

சீனாவில் டிசம்பரில் ஆரம்பித்த இந்த நோய், மார்ச் மாதத்திலும் தொடர்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டு நாம் முன்கூட்டியே செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஆயிரம் பேரை தங்கவைத்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்ற வகையிலும், கண்காணிக்கின்றன வகையிலும் நாம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.

அதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவினை அளித்து அந்த காலக்கெடுவிற்குள் இந்தியாவிற்குள் வந்துவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் வெளிநாட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம்.

தஞ்சாவூர் மக்களவை உறுப்பினருடன் ஒரு உரையாடல்

அதேபோல இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரையும் ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்தத் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவிப்புகள் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தேவையிருந்திருக்காது.

தற்போது பார்த்தீர்களென்றால் ஒரிசாவை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பேருக்காக ஒரு மருத்துவமனை கட்டுகின்ற முயற்சியில் அந்த அரசு உள்ளது. இன்னும் நான்கு தினங்களில் அந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை பற்றி பேசும்போது அவர் கொஞ்சம் உற்சாகமாக குறைவாக செயல்படுவார் என்று பேசப்படும். ஆனால் அது உண்மை கிடையாது. அவர் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பார்.

1998ஆம் ஆண்டு ஒரு இடைத்தேர்தல் வந்தபோது அவருடைய செயல்பாடுகளை நான் உற்றுநோக்கி இருக்கின்றேன். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், செயல்களில் தீவிரமாக இருப்பார். அவர்கள் செயல்கள் நல்ல முடிவுகளை கொடுக்கும்.

இதுபோன்ற அனுபவங்களை பெற்றுள்ளதால், எதையும் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தற்பொழுது இந்த தொகையை ஒதுக்கி உள்ளேன்.

இதற்கு முக்கிய காரணம் எனது தொகுதியில் அதிகபட்சமான இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். எனவே, ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உபகரணம் இல்லை அந்த உபகரணம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

மருத்துவத்துறை வல்லுனர்கள் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு சில மாதங்களுக்குப் பிறகு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கணித்துள்ளனர்.

மருத்துவமனைகளுக்காக உபகரணங்கள் வாங்குவது எந்த காலத்திலும் ஒரு வீண் செலவாக இருக்காது. பிற்காலத்திலும் அது ஒரு பொருளாக இருந்து மக்களுக்கு சேவை அளிக்க உதவும். இது அழிந்து போகின்ற ஒன்றிற்காக செய்யப்படுகிற செலவும் இல்லை.

எனது தொகுதி நிதியிலிருந்து ஏற்கனவே நான் பரிந்துரை செய்திருந்த பணிகளுக்காக டெண்டர் விடுக்கப்படாமல் இருந்தது. எனவே, அந்த பணிகளை ரத்து செய்து அந்தத் தொகையையும் சேர்த்து இந்த கரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளேன்.

2020-21ஆம் ஆண்டிற்கான ஆண்டிற்கான மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உறுப்பினர்கள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பெற முடியும். எனவே நான் மட்டுமல்ல எல்லா தமிழ்நாடு உறுப்பினர்களும் அதிகமான நிதியினை இதற்காக ஒதுக்க முடியும்.

இன்னொன்று பணத்தைவிட உடல் நலமும் சுகாதாரமும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். எனவேதான் தற்பொழுது தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன்” என கூறினார்.

இதையும் படிங்க...குடும்ப உறவை வலுவாக்குங்கள் - கரோனா கொடுத்த பொன்னான வாய்ப்பு

Last Updated : Mar 28, 2020, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.