ETV Bharat / bharat

”ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

author img

By

Published : Jul 3, 2020, 6:04 PM IST

டெல்லி : நீட் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Sonia Gandhi
Sonia Gandhi

மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகின்றன. இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், நீட் மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடித்ததில், "அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி, மத்திய, மாநில / யூனியன் பிரதேச மருத்துவ கல்வி நிறுவனங்களில் முறையே 15%, 7.5%, 10% இடங்கள் எஸ்சி, எஸ்டி, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இருப்பினும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டு முதல், பல மாநிலங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் ஒபிசி வகுப்பினர் சுமார் 11,000 இடங்களை இழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களும், பட்டியலின, பழங்குடியின மக்களும் தனியார் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 93ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் சோனியா காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், "மாநில மருத்துவ நிறுவனங்களில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு மறுப்பது 93ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீறும் வகையில் உள்ளது. எனவே, சமூக நீதியை நிலைநாட்ட நீட் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "மோடி சொல்வது பொய்" - ராகுல் காந்தி

மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகின்றன. இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், நீட் மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடித்ததில், "அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி, மத்திய, மாநில / யூனியன் பிரதேச மருத்துவ கல்வி நிறுவனங்களில் முறையே 15%, 7.5%, 10% இடங்கள் எஸ்சி, எஸ்டி, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இருப்பினும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டு முதல், பல மாநிலங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் ஒபிசி வகுப்பினர் சுமார் 11,000 இடங்களை இழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களும், பட்டியலின, பழங்குடியின மக்களும் தனியார் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 93ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் சோனியா காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், "மாநில மருத்துவ நிறுவனங்களில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு மறுப்பது 93ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீறும் வகையில் உள்ளது. எனவே, சமூக நீதியை நிலைநாட்ட நீட் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "மோடி சொல்வது பொய்" - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.