ETV Bharat / bharat

மசூதிக்குள் பெண்கள் நுழையலாமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : May 20, 2020, 9:34 PM IST

டெல்லி: மசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு தொடரப்பட்ட பொதுநல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC
SC

மசூதிக்குள் பெண்கள் நுழைவது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற அடக்குமுறைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதா எனவும், பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைக்கு விரோதமானா என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சம், தேசிய பெண்கள் உரிமை ஆணையம், அகில இந்திய இஸ்லாமியர்கள் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவையும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் போப்பன்னா, ஹரிகேஷ் ராய் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திர சிறுமிக்கு ட்ரம்ப் புகழாரம்!

மசூதிக்குள் பெண்கள் நுழைவது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற அடக்குமுறைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதா எனவும், பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைக்கு விரோதமானா என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சம், தேசிய பெண்கள் உரிமை ஆணையம், அகில இந்திய இஸ்லாமியர்கள் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவையும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் போப்பன்னா, ஹரிகேஷ் ராய் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திர சிறுமிக்கு ட்ரம்ப் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.