ETV Bharat / bharat

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தருணமிது

உலகளவில் புவி வெப்பமயமாதலால் பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துவரும் நிலையில், சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

author img

By

Published : Jan 12, 2020, 10:49 PM IST

Climate changes
Climate changes

ஆம்.. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை! நாளை எனும் எதிர்காலத்தின் மீது கவிந்திருக்கும் இருள் மேகங்களை அகற்றுவதற்கான நேரம், இது!!

வசந்தகாலம் என்பது நினைவுகளின் ஓட்டத்தில் மறைந்துகொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டானது (Decade) , நம்பிக்கையையும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. எல்லையில்லா நம்பிக்கையைக் கொண்ட இந்த உலகம், நவீனமான புதிய உலகத்துக்குள் செல்வதற்கான பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் செயல்பாடானது, அந்தப் புது உலகிற்குச் செல்வதற்காக, கடந்துபோன ஆண்டுகளில் செய்த பிழைகளை எதிர்கொள்ளும் சவால்களைத் தூக்கிவீசுகிறது.

நாளைய காலத்தை மூடியிருக்கும் இருண்ட திரைச்சீலைகளான அந்த சவால்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் என்னென்ன? அமைதியான ஒரு புதிய பத்தாண்டுகளை ஏற்படுத்துவதற்கு மனிதர்கள் தன்னளவில் எப்படி தயாராகவேண்டும்? 2020-30 காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைப் பற்றிய சிறப்புச் செய்திக்கட்டுரை...

சந்தேகமே இல்லை, நாம் வெப்பமான இடத்தின் மீது அமர்ந்துகொண்டிருக்கிறோம்; நெருப்பு நம்மை எரித்துக்கொண்டிருப்பதைப் பற்றி உணராமல், இது வெறும் சூடு என்பதாக நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் பருவநிலை மாற்றம் பற்றி உணரவைக்க எந்த அளவுக்கு நமக்கு திறம் இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளை பாதிக்கக்கூடிய இயற்கைப் பேரழிவுகளை எப்படி கட்டுப்படுத்துவது, பசுமையை எப்படிப் பாதுகாப்பது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

இப்போதைக்கு அப்படியான பேரழிவு ஏதும் நேரப்போவதில்லை; அதனால் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை; பாதுகாப்பாக இருக்கிறோம் எனும் கருத்து நிலவுகிறது. கெடுவாய்ப்பாக, அது உண்மை இல்லை. நாம் மறுப்பு தெரிவிக்கும் மனநிலையில் இருந்தாலும், ஒட்டுமொத்த குழப்படி - பாதக விளைவுளின் நடுவில் நாம் மாட்டிக்கொள்ளப்போவது விரைவில் நடந்தேறும் என்பதை உணரவேண்டிய தேவை உள்ளது.

அண்மையில், சிறிதும் எதிர்பார்க்கப்படாத பெருமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடு ஆனது; வெள்ளம் வடிந்த சில மாதத்திலேயே ஒரு பொட்டுத் தண்ணீர்கூட இல்லாதபடி ஒட்டுமொத்த நகரமே தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தவித்துப்போனது. இதைப்போலவே, மும்பை நகரமும் பொருத்தமற்ற காலப் பெருமழையால் நீரில் மிதந்தது; அதேவேளை, சுற்றிலும் உள்ள விவசாயிகள் விவசாயத்துக்கு மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இப்படி தொடர்ச்சியான மழைப்பொழிவானது, தேக்கமாகி தடங்கலாக மாறவும், வடிகால்கள், கொசுக்களைப் போன்ற பல்வேறு பூச்சிகளின் பெருக்கத்துக்கான வாய்ப்பிடமாக மாறவும் காரணமாகிறது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் பருவநிலை தப்புதல்தான் என்பதை நம்பமுடிகிறதா?

சந்தையில் வெங்காய விலைக்கும் பருவநிலை தப்புதலுக்கும் இடையிலான தொடர்பு நேர்விகிதத்தில் இருக்கிறது என்பதைப் பற்றி எப்போதேனும் நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? முன்னரே கணிக்கமுடியாதபடி பெய்யும் மழை, பயிர் இழப்புகள் ஆகியவை பருவநிலை தப்புதலின் விளைவே என்பதை சுற்றுச்சூழலியலாளர்கள் அறிவிக்கவே செய்கின்றனர். இப்படித்தான் வெங்காய சாகுபடியும் குறைகிறது. விளைவாக, வெங்காய உற்பத்தியில் பற்றாக்குறையாகி, சந்தையில் வெங்காயத்தின் விலையானது சாமானிய மக்களால் வாங்க முடியாதபடி ஏற்றம் கண்டுள்ளது.

அலறச்செய்யும் அடுத்த பத்தாண்டு!

புவி வெப்பமயமாதல் : புவிக்கோளத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது ஏற்கெனவே சராசரியிலிருந்து ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இன்னும் ஒரு டிகிரி செல்சியஸ், அதாவது மொத்தமாக 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயருமானால், பனிமலையும் இமயமலையும் உருகத்தொடங்கி, கடலோரப்பகுதிகள் மூழ்கும் பேரபாயம் ஏற்படும். இவ்வாறான பெரிய பேரழிவுகளுக்கு காரணம் என்ன, புவி வெப்பமயமாதல்தான்! ஆகையால், புவிவெப்பநிலையானது 1.5 டிகிரி அளவைவிட அதிகரிக்காதபடி உடனடிச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கரிம உமிழ்வுகள்:

நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் பேரளவிலான பயன்பாடு, வாயு மண்டலத்தில் கரிம உமிழ்வுகளின் அடர்த்தியை 300 பி.பி.எம்.(P.P.M.) முதல் 400 பிபிஎம் அதிகரித்திருக்கிறது. புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான இந்த உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவது இந்த பதிற்றாண்டின் சவாலாகும். கரிம உமிழ்வுகளைத் தடுப்பதும் ஏற்கெனவே சுற்றுச்சூழலில் சேகரமாகியிருக்கிற உமிழ்வுகளை அழிப்பதும் நடப்புப் பிரச்னை ஆகும். அது கடலில் கலந்து கரைவதற்கு இன்னும் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதிவிரைவான பருவநிலை தப்புதலைக் கையாள்வதற்கான தீர்வுகளைக் கண்டறிவது, இந்த பதிற்றாண்டின் மிகப்பெரும் சவால்களில் ஒன்று.

எப்படி சாதிக்கப்போகிறோம்?

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் பருவநிலை தப்புதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. 1992ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோ மாநாடு முதல் 2016ஆம் ஆண்டு பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கைவரை பலவற்றைச் சொல்லமுடியும். அரசுகள் மட்டுமே இதில் முழுப்பொறுப்பு கொண்ட தரப்பு என்பது கூடாது; தனி நபர் அளவில் நாம் அனைவருமே பருவநிலை குறித்த புரிந்துகொள்ளலில் முக்கிய வினை புரிந்தாகவேண்டும்.

மரங்களை வெட்டாதீர்கள்; வளர்க்கப் பாருங்கள்!

தாவரங்களும் காடுகளும் கரிம உமிழ்வை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. காடுகள் பேணிக் காக்கப்படவேண்டும். முதலில், இருக்கும் மரங்களை வெட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொருவரும் இதை ஓர் இயக்கமாகச் செய்யவேண்டும். ஒரு மரக்கன்றை நட்டுவிட்டோம் என்பதுடன் சும்மா இருந்துவிடக்கூடாது; அது வளர்ந்து மரமாகும்வரை அதே அக்கறை இருக்கவேண்டும்.

மின்சார வாகனங்களுக்கு மாற்றம்!

பெட்ரோல், டீசல் வாகனங்களே பெருமளவிலான கரிம உமிழ்வுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் இந்த பதிற்றாண்டுக்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உயர்த்துவது தவிர்க்கமுடியாததாகும். அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வண்டிகளின் உற்பத்தியை நிறுத்துவதென பல நிறுவனங்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. சூரியசக்தி மற்றும் காற்று மின்சாரத்தை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

காரைக் குறைத்து, நடைபோடுங்கள்!

தனிநபர் வாகனங்களைவிட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது இப்போதைய தேவை. நான்கைந்து பேரை ஏற்றிச்செல்லவேண்டிய ஒரு காரில் தனியாகப் பயணம்செய்து, எரிபொருளை வீணாக்கக்கூடாது. அப்படியான நேரத்தில் அதே வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய சிலரையும் உடன் அழைத்துச்செல்லலாம். இப்படி மோட்டார் வாகனங்களில் செல்வதைவிட மிதிவண்டியிலோ நடந்தோ செல்லவும் முடியும். பொதுப்போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடியவகையில் அரசுக் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்.

வேலையிடத்துக்கு அருகில் வீடு

முடிந்த அளவுக்கு வேலைசெய்யும் இடத்துக்கு அருகில் குடியிருப்பு இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அது, வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதுடன் மாசையும் குறைக்கும்.

சூழலுக்கு இசைவான இல்லம்

வீடுகளோ அலுவலகங்களோ அவை முழுவதுமான காற்றோட்டத்துடனும் சுற்றுச்சூழலுக்கு இசைவானதாகவும் அமைக்கப்படவேண்டும். அத்துடன், மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் அவை கொண்டிருக்கவேண்டும்.

நெகிழி(பிளாஸ்டிக்) ஒழிப்பு

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி விவகாரத்தைப் பொருத்தவரை, மறுபயன்பாடு, மறுசுழற்சி, குறைப்பு என்கிற முழக்கம் ஏற்கெனவே இருந்துவருகிறது. அத்துடன், ’மறுப்பு’ என்பதையும் இப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். டெல்லியில் ஒற்றை இலக்க எண்கள், இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகன அனுமதி மட்டுப்படுத்தல் முறையைப் போலவே, சில நாடுகளில் கொள்கைகளாக இருக்கும் சாலையைத் தெருவாக்குதல் போல விடுமுறையின்போது சில மணி நேரத்துக்கு நெடுஞ்சாலைகளில் வண்டிகளை இயக்கவிடாமலும் தடைவிதிக்கப்படுகிறது. இது, படிப்படியாக சில மாநிலங்கள் அளவுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

ஐ.நா.வின் இலக்குப்பயணம்

பசுமை இல்லா வாயு உமிழ்வை 2030ஆம் ஆண்டுக்குள் 45% ஆகக் குறைக்கவும் 2050-க்குள் இல்லாமலே ஆக்கி, புவிவெப்பமயமாதலைக் குறைக்கவும் ஐ.நா. இலக்குவைத்துள்ளது.

இதையும் படிங்க: நொடிகளில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து - அஷோக் லேலாண்ட் தயாரிக்கிறது!

அதற்கான பங்களிப்பாளர்கள்:

நாடுகள் 192
நகரங்கள் 10,455
நிறுவனங்கள் 3,676
முதலீட்டாளர்கள் 1,136
அமைப்புகள் 1,323

ஆம்.. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை! நாளை எனும் எதிர்காலத்தின் மீது கவிந்திருக்கும் இருள் மேகங்களை அகற்றுவதற்கான நேரம், இது!!

வசந்தகாலம் என்பது நினைவுகளின் ஓட்டத்தில் மறைந்துகொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டானது (Decade) , நம்பிக்கையையும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. எல்லையில்லா நம்பிக்கையைக் கொண்ட இந்த உலகம், நவீனமான புதிய உலகத்துக்குள் செல்வதற்கான பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் செயல்பாடானது, அந்தப் புது உலகிற்குச் செல்வதற்காக, கடந்துபோன ஆண்டுகளில் செய்த பிழைகளை எதிர்கொள்ளும் சவால்களைத் தூக்கிவீசுகிறது.

நாளைய காலத்தை மூடியிருக்கும் இருண்ட திரைச்சீலைகளான அந்த சவால்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் என்னென்ன? அமைதியான ஒரு புதிய பத்தாண்டுகளை ஏற்படுத்துவதற்கு மனிதர்கள் தன்னளவில் எப்படி தயாராகவேண்டும்? 2020-30 காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைப் பற்றிய சிறப்புச் செய்திக்கட்டுரை...

சந்தேகமே இல்லை, நாம் வெப்பமான இடத்தின் மீது அமர்ந்துகொண்டிருக்கிறோம்; நெருப்பு நம்மை எரித்துக்கொண்டிருப்பதைப் பற்றி உணராமல், இது வெறும் சூடு என்பதாக நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் பருவநிலை மாற்றம் பற்றி உணரவைக்க எந்த அளவுக்கு நமக்கு திறம் இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளை பாதிக்கக்கூடிய இயற்கைப் பேரழிவுகளை எப்படி கட்டுப்படுத்துவது, பசுமையை எப்படிப் பாதுகாப்பது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

இப்போதைக்கு அப்படியான பேரழிவு ஏதும் நேரப்போவதில்லை; அதனால் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை; பாதுகாப்பாக இருக்கிறோம் எனும் கருத்து நிலவுகிறது. கெடுவாய்ப்பாக, அது உண்மை இல்லை. நாம் மறுப்பு தெரிவிக்கும் மனநிலையில் இருந்தாலும், ஒட்டுமொத்த குழப்படி - பாதக விளைவுளின் நடுவில் நாம் மாட்டிக்கொள்ளப்போவது விரைவில் நடந்தேறும் என்பதை உணரவேண்டிய தேவை உள்ளது.

அண்மையில், சிறிதும் எதிர்பார்க்கப்படாத பெருமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடு ஆனது; வெள்ளம் வடிந்த சில மாதத்திலேயே ஒரு பொட்டுத் தண்ணீர்கூட இல்லாதபடி ஒட்டுமொத்த நகரமே தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தவித்துப்போனது. இதைப்போலவே, மும்பை நகரமும் பொருத்தமற்ற காலப் பெருமழையால் நீரில் மிதந்தது; அதேவேளை, சுற்றிலும் உள்ள விவசாயிகள் விவசாயத்துக்கு மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இப்படி தொடர்ச்சியான மழைப்பொழிவானது, தேக்கமாகி தடங்கலாக மாறவும், வடிகால்கள், கொசுக்களைப் போன்ற பல்வேறு பூச்சிகளின் பெருக்கத்துக்கான வாய்ப்பிடமாக மாறவும் காரணமாகிறது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் பருவநிலை தப்புதல்தான் என்பதை நம்பமுடிகிறதா?

சந்தையில் வெங்காய விலைக்கும் பருவநிலை தப்புதலுக்கும் இடையிலான தொடர்பு நேர்விகிதத்தில் இருக்கிறது என்பதைப் பற்றி எப்போதேனும் நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? முன்னரே கணிக்கமுடியாதபடி பெய்யும் மழை, பயிர் இழப்புகள் ஆகியவை பருவநிலை தப்புதலின் விளைவே என்பதை சுற்றுச்சூழலியலாளர்கள் அறிவிக்கவே செய்கின்றனர். இப்படித்தான் வெங்காய சாகுபடியும் குறைகிறது. விளைவாக, வெங்காய உற்பத்தியில் பற்றாக்குறையாகி, சந்தையில் வெங்காயத்தின் விலையானது சாமானிய மக்களால் வாங்க முடியாதபடி ஏற்றம் கண்டுள்ளது.

அலறச்செய்யும் அடுத்த பத்தாண்டு!

புவி வெப்பமயமாதல் : புவிக்கோளத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது ஏற்கெனவே சராசரியிலிருந்து ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இன்னும் ஒரு டிகிரி செல்சியஸ், அதாவது மொத்தமாக 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயருமானால், பனிமலையும் இமயமலையும் உருகத்தொடங்கி, கடலோரப்பகுதிகள் மூழ்கும் பேரபாயம் ஏற்படும். இவ்வாறான பெரிய பேரழிவுகளுக்கு காரணம் என்ன, புவி வெப்பமயமாதல்தான்! ஆகையால், புவிவெப்பநிலையானது 1.5 டிகிரி அளவைவிட அதிகரிக்காதபடி உடனடிச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கரிம உமிழ்வுகள்:

நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் பேரளவிலான பயன்பாடு, வாயு மண்டலத்தில் கரிம உமிழ்வுகளின் அடர்த்தியை 300 பி.பி.எம்.(P.P.M.) முதல் 400 பிபிஎம் அதிகரித்திருக்கிறது. புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான இந்த உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவது இந்த பதிற்றாண்டின் சவாலாகும். கரிம உமிழ்வுகளைத் தடுப்பதும் ஏற்கெனவே சுற்றுச்சூழலில் சேகரமாகியிருக்கிற உமிழ்வுகளை அழிப்பதும் நடப்புப் பிரச்னை ஆகும். அது கடலில் கலந்து கரைவதற்கு இன்னும் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதிவிரைவான பருவநிலை தப்புதலைக் கையாள்வதற்கான தீர்வுகளைக் கண்டறிவது, இந்த பதிற்றாண்டின் மிகப்பெரும் சவால்களில் ஒன்று.

எப்படி சாதிக்கப்போகிறோம்?

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் பருவநிலை தப்புதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. 1992ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோ மாநாடு முதல் 2016ஆம் ஆண்டு பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கைவரை பலவற்றைச் சொல்லமுடியும். அரசுகள் மட்டுமே இதில் முழுப்பொறுப்பு கொண்ட தரப்பு என்பது கூடாது; தனி நபர் அளவில் நாம் அனைவருமே பருவநிலை குறித்த புரிந்துகொள்ளலில் முக்கிய வினை புரிந்தாகவேண்டும்.

மரங்களை வெட்டாதீர்கள்; வளர்க்கப் பாருங்கள்!

தாவரங்களும் காடுகளும் கரிம உமிழ்வை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. காடுகள் பேணிக் காக்கப்படவேண்டும். முதலில், இருக்கும் மரங்களை வெட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொருவரும் இதை ஓர் இயக்கமாகச் செய்யவேண்டும். ஒரு மரக்கன்றை நட்டுவிட்டோம் என்பதுடன் சும்மா இருந்துவிடக்கூடாது; அது வளர்ந்து மரமாகும்வரை அதே அக்கறை இருக்கவேண்டும்.

மின்சார வாகனங்களுக்கு மாற்றம்!

பெட்ரோல், டீசல் வாகனங்களே பெருமளவிலான கரிம உமிழ்வுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் இந்த பதிற்றாண்டுக்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உயர்த்துவது தவிர்க்கமுடியாததாகும். அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வண்டிகளின் உற்பத்தியை நிறுத்துவதென பல நிறுவனங்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. சூரியசக்தி மற்றும் காற்று மின்சாரத்தை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

காரைக் குறைத்து, நடைபோடுங்கள்!

தனிநபர் வாகனங்களைவிட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது இப்போதைய தேவை. நான்கைந்து பேரை ஏற்றிச்செல்லவேண்டிய ஒரு காரில் தனியாகப் பயணம்செய்து, எரிபொருளை வீணாக்கக்கூடாது. அப்படியான நேரத்தில் அதே வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய சிலரையும் உடன் அழைத்துச்செல்லலாம். இப்படி மோட்டார் வாகனங்களில் செல்வதைவிட மிதிவண்டியிலோ நடந்தோ செல்லவும் முடியும். பொதுப்போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடியவகையில் அரசுக் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்.

வேலையிடத்துக்கு அருகில் வீடு

முடிந்த அளவுக்கு வேலைசெய்யும் இடத்துக்கு அருகில் குடியிருப்பு இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அது, வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதுடன் மாசையும் குறைக்கும்.

சூழலுக்கு இசைவான இல்லம்

வீடுகளோ அலுவலகங்களோ அவை முழுவதுமான காற்றோட்டத்துடனும் சுற்றுச்சூழலுக்கு இசைவானதாகவும் அமைக்கப்படவேண்டும். அத்துடன், மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் அவை கொண்டிருக்கவேண்டும்.

நெகிழி(பிளாஸ்டிக்) ஒழிப்பு

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி விவகாரத்தைப் பொருத்தவரை, மறுபயன்பாடு, மறுசுழற்சி, குறைப்பு என்கிற முழக்கம் ஏற்கெனவே இருந்துவருகிறது. அத்துடன், ’மறுப்பு’ என்பதையும் இப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். டெல்லியில் ஒற்றை இலக்க எண்கள், இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகன அனுமதி மட்டுப்படுத்தல் முறையைப் போலவே, சில நாடுகளில் கொள்கைகளாக இருக்கும் சாலையைத் தெருவாக்குதல் போல விடுமுறையின்போது சில மணி நேரத்துக்கு நெடுஞ்சாலைகளில் வண்டிகளை இயக்கவிடாமலும் தடைவிதிக்கப்படுகிறது. இது, படிப்படியாக சில மாநிலங்கள் அளவுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

ஐ.நா.வின் இலக்குப்பயணம்

பசுமை இல்லா வாயு உமிழ்வை 2030ஆம் ஆண்டுக்குள் 45% ஆகக் குறைக்கவும் 2050-க்குள் இல்லாமலே ஆக்கி, புவிவெப்பமயமாதலைக் குறைக்கவும் ஐ.நா. இலக்குவைத்துள்ளது.

இதையும் படிங்க: நொடிகளில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து - அஷோக் லேலாண்ட் தயாரிக்கிறது!

அதற்கான பங்களிப்பாளர்கள்:

நாடுகள் 192
நகரங்கள் 10,455
நிறுவனங்கள் 3,676
முதலீட்டாளர்கள் 1,136
அமைப்புகள் 1,323
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.