விஷவாயு தாக்கி இறக்கும் செயல்கள், தொடர்கதைகள் ஆகி வருகின்றன. மற்ற விபத்துகளைவிட மிகவும் கொடுமையான, இந்த விபத்து மறுபடியும் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கரின் முங்கேலியில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய, துப்புரவுத் தொழிலாளி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முயற்சித்துள்ளனர். கௌஷிக் என்பவர் கழிவுநீர்த் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது, மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் விழுவதைக் கண்ட மற்றொரு குடும்ப உறுப்பினர், உடனே தொட்டிக்குள் குதித்து, அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், நிலைமை இன்னும் மோசமாக, தொட்டிக்குள் குதித்தவரும் மயங்கியுள்ளார். இவர்களைக் காப்பாற்ற துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சென்றபோது, அவரும் இறந்துள்ளார்.
பின்பு அவர்களை மீட்டபோது மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை