சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில்,பெண்கள் சுய உதவி குழுக்கள் திட்டத்தின் கிழ் பெண்கள் குழுவாக இணைந்து சுற்றுசூழலுக்கு உகந்த வகையிலான விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
இதற்கென மாட்டு சாணங்களை பயன்படுத்தி விளக்குகளை தயாரிக்கும் பெண்கள், அவை காய்ந்ததும் அழகிய வண்ணங்களைப் பூசி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இங்கு தாயரிக்கப்படும் விளக்குகள் குறைவிலைக்கே விற்கப்படுகிறது. சின்ன விளக்குகள் ரூ.5க்கும், பெரிய விளக்குகள் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விளக்குகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி