ETV Bharat / bharat

விவசாயிகளை சுரண்டும் புதிய ஜமீன்தாரி சட்டங்களை அறிமுகப்படுத்தும் மோடி அரசு - காங்கிரஸ் தாக்கு! - மத்திய அரசு

டெல்லி: விவசாயிகள்-விவசாய கூலி தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக சுரண்டும் கருப்புச் சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

விவசாயிகளைச் சுரண்டும் 'கருப்பு' சட்டங்களை அறிமுகப்படுத்தும் மோடி அரசு - காங்கிரஸ் தாக்கு!
விவசாயிகளைச் சுரண்டும் 'கருப்பு' சட்டங்களை அறிமுகப்படுத்தும் மோடி அரசு - காங்கிரஸ் தாக்கு!
author img

By

Published : Sep 18, 2020, 2:23 AM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்வரைவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வரைவுகளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வின் முதல் நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாக்கள் விவசாயிகளை, விவசாயக் கூலி தொழிலாளர்களை பெரும் நிறுவனங்கள் சுதந்திரமாக சுரண்டுவதற்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் இனி தங்களின் விளைப்பொருளுக்கு அவர்கள் நினைக்கும் விலையை முன்வைக்க முடியாது. அவர்கள் மிக குறைந்த விலைக்கே தமது விளைப்பொருள்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை இந்த சட்ட முன்வரைவுகள் பாதுகாப்பதற்கு பதிலாக காவு வாங்கியுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்பரேட்டுகளுக்கு விற்பதை இந்த திருத்தங்கள் எளிமையாக்குகிறது.

விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் என்றே இந்த கருப்புச் சட்டங்களை கூற வேண்டும். இது ஜமீன்தார் முறையின் புதிய வடிவம் என்றே கருதப்பட வேண்டும். பிரதமர் மோடியின் சில நண்பர்களின் நன்மைக்காக இது வகுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்வரைவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வரைவுகளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வின் முதல் நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாக்கள் விவசாயிகளை, விவசாயக் கூலி தொழிலாளர்களை பெரும் நிறுவனங்கள் சுதந்திரமாக சுரண்டுவதற்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் இனி தங்களின் விளைப்பொருளுக்கு அவர்கள் நினைக்கும் விலையை முன்வைக்க முடியாது. அவர்கள் மிக குறைந்த விலைக்கே தமது விளைப்பொருள்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை இந்த சட்ட முன்வரைவுகள் பாதுகாப்பதற்கு பதிலாக காவு வாங்கியுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்பரேட்டுகளுக்கு விற்பதை இந்த திருத்தங்கள் எளிமையாக்குகிறது.

விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் என்றே இந்த கருப்புச் சட்டங்களை கூற வேண்டும். இது ஜமீன்தார் முறையின் புதிய வடிவம் என்றே கருதப்பட வேண்டும். பிரதமர் மோடியின் சில நண்பர்களின் நன்மைக்காக இது வகுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.