ETV Bharat / bharat

காமராஜ் நகர் இடைத்தேர்தல்: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

author img

By

Published : Oct 22, 2019, 4:59 PM IST

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அக். 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

collector arun

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான் குமாரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புவனேஷ்வரன் உள்பட ஒன்பது பேர் போட்டியிட்டனர். நேற்று (அக்.21) காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவுற்றது. இந்த இடைத்தேர்தலில் 69.44 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பார்வையிட்ட ஆட்சியர்

வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை எட்டு மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 12 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான் குமாரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புவனேஷ்வரன் உள்பட ஒன்பது பேர் போட்டியிட்டனர். நேற்று (அக்.21) காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவுற்றது. இந்த இடைத்தேர்தலில் 69.44 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பார்வையிட்ட ஆட்சியர்

வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை எட்டு மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 12 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Intro:புதுச்சேரியில் மழைக்காலங்களை முன்னிட்டு பொதுப்பணித்துறை மின்துறை ஆகியோருடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட் பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்


Body:புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வரும் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் என்று அங்கு நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண் வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கும் காலை எட்டு மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் பின்னர் எட்டு முப்பது மணிக்கு விவிபேட் எனப்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள் எண்ணப்படும்
12 மணிக்கு வாக்கு என்னைக்கு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்

புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தலைமை செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றவர் மேலும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மழைக்காக முன்னிட்டு வாய்க்கால் கால்வாய்கள் அதுவே கூறப்பட்டுள்ளது மரக்கிளைகள் அங்கங்கே வெட்டப்பட்டுள்ளன பொதுபணித்துறை வனத்துறை மின்துறை அவற்றுடன் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது மேலும் அத் துறையினர் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


Conclusion:புதுச்சேரி மழைக்காலங்களில் முன்னிட்டு பொதுப்பணித்துறை மின்துறை ஆகியோருடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட் பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.