ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு துறைகள் 155 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகள் மொத்தம் ரூ.155 கோடி மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry govt department has a whopping 155 crore as Electric bill Balance
author img

By

Published : May 15, 2019, 8:42 AM IST

மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் விசிசி நாகராஜ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது இதுகுறித்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னை நிதி நெருக்கடி என்றும், அரசுத் துறைகளிடம் அரசாங்கம் சரியாக வரி வசூல் செய்யாததே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

ஏழைகள் மின் பாக்கி 200 ரூபாய் வைத்தால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகள் மொத்தம் ரூ. 155 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும், பொதுப்பணித் துறை மட்டும் ரூ. 1 கோடி மின் பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரி அரசு துறைகள் 155 கோடி மின் கட்டண பாக்கி

மேலும், மின்துறையே 35 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

"மின்கட்டண உயர்வு குறித்து மக்கள் குறைகேற்பு கூட்டத்தில் நாங்கள் விவாதிக்கையில், பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யவேண்டியுள்ளதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அவர்கள் கூறினார்கள்" என்றார்.

அதுமட்டுமின்றி, மின்துறைக்கு ரூ.155 கோடி நிதி நெருக்கடி இருக்கும்போது எதற்கு பொதுமக்கள் தலையில் சுமையை வைக்க வேண்டும்? அப்படி பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வரி எங்கே போகிறது? என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, அதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"155 கோடி ரூபாய் வைத்து பட்ஜெட் போடலாம்" என்று விமர்சித்த அவர், நுகர்வோர் மீது எல்லா வரியையும் சுமத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் விசிசி நாகராஜ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது இதுகுறித்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னை நிதி நெருக்கடி என்றும், அரசுத் துறைகளிடம் அரசாங்கம் சரியாக வரி வசூல் செய்யாததே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

ஏழைகள் மின் பாக்கி 200 ரூபாய் வைத்தால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகள் மொத்தம் ரூ. 155 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும், பொதுப்பணித் துறை மட்டும் ரூ. 1 கோடி மின் பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரி அரசு துறைகள் 155 கோடி மின் கட்டண பாக்கி

மேலும், மின்துறையே 35 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

"மின்கட்டண உயர்வு குறித்து மக்கள் குறைகேற்பு கூட்டத்தில் நாங்கள் விவாதிக்கையில், பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யவேண்டியுள்ளதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அவர்கள் கூறினார்கள்" என்றார்.

அதுமட்டுமின்றி, மின்துறைக்கு ரூ.155 கோடி நிதி நெருக்கடி இருக்கும்போது எதற்கு பொதுமக்கள் தலையில் சுமையை வைக்க வேண்டும்? அப்படி பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வரி எங்கே போகிறது? என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, அதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"155 கோடி ரூபாய் வைத்து பட்ஜெட் போடலாம்" என்று விமர்சித்த அவர், நுகர்வோர் மீது எல்லா வரியையும் சுமத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

Intro:புதுச்சேரியில் கோடிக்கணக்கில் மின் பாக்கி வைத்துள்ள அரசு துறைகள் மீது பொதுமக்கள் மீது நடவடிக்கை போன்று அரசுத் துறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் மன்றம் வலியுறுத்தி உள்ளது


Body:புதுச்சேரி


புதுச்சேரி மின்துறை வாங்கும் மின்சாரத்துக்கான பயன்பாடு மற்றும் மின் துறையில் மேற்கொள்ளும் திட்டங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவை தொகையை சரிசெய்ய அவ்வப்போது மின்கட்டண உயர்த்தப்படுகிறது

பொதுமக்கள் மின் கட்டண பாக்கி வைத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் உடனுக்குடன் செலுத்தி விடுகின்றனர் ஆனால் அரசு நிறுவனங்கள் அவ்வாறு செயல்படாமல் பல மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி வருகிறது பல நேரங்களில் ஆண்டு கணக்கில் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையாக கொள்வது வழக்கமாக உள்ளது இவ்வாறு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் பல கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளனர் கடந்த பிப்ரவரி மாதம் வரை மின் கட்டணம் நிலுவை வைத்துள்ள அரசு துறைகளில் பொதுப்பணித்துறை ,காவல்துறையில், சுகாதாரம் ,கல்வி, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகள் 155 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது அதனால் அத்துறைக்கு மின் துறை சார்பில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் வி சிசி நாகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தனர்

மேலும் அவர் பேசுகையில் புதுச்சேரி மின்துறை சார்பில் மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது அதில் பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பது இல்லை ஆனால் ஏழைகள் மின் பாக்கி 200 ரூபாய் வைத்தால் உடனே இணைப்பை துண்டிக்கப்படுகிறது ஆனால் புதுச்சேரி அரசு துறைகளில் கோடிக்கணக்கில் மின் பாக்கி வைக்கப்பட்டுள்ளது நடவடிக்கை இல்லை என்றார் எனவே விடுபட்ட மின் பாக்கியை உடனே அரசு வசூல் செய்ய வேண்டும் ,பொது மக்களுக்கு ஒரு நீதி ,அரசுக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பினர் பொதுமக்கள் இணைப்பைத் துண்டிப்பதே மின்துறை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்


Conclusion:புதுச்சேரியில் கோடிக்கணக்கில் மின் பாக்கி வைத்துள்ள அரசு துறைகள் மீது பொதுமக்கள் மீது நடவடிக்கை போன்று அரசுத் துறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் மன்றம் வலியுறுத்தி உள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.