ETV Bharat / bharat

'ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... அனைவருக்கும் பெருமை' - நாராயணசாமி வாழ்த்து - ரஜினிகாந்திற்கு எனது வாழ்த்துகள்

புதுச்சேரி: 'மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியிருப்பது அனைவருக்கும் பெருமை. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

narayanasamy
author img

By

Published : Nov 5, 2019, 3:13 PM IST

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழ் மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளனர். திருவள்ளுவரை களங்கப்படுத்தி காவித் துணி போர்த்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவரை அவமதித்தவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியிருப்பது அனைவருக்கும் பெருமை. நடிகர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன" என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழ் மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளனர். திருவள்ளுவரை களங்கப்படுத்தி காவித் துணி போர்த்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவரை அவமதித்தவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியிருப்பது அனைவருக்கும் பெருமை. நடிகர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன" என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Intro:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு புதுச்சேரி அரசு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்


Body:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழ்மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளனர் திருவள்ளுவரை களங்கப்படுத்தி காவித் துணி போர்த்தி அவமானப்படுத்தி உள்ளனர் அனைத்து காலத்திற்கும் பொருந்தும் மறைபொருளாக உள்ளது திருக்குறள் என்றார் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் அப்போது தெரிவித்தார் தமிழக அரசு திருவள்ளுவரை அவமதித்து அவர்களை மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் இச்சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை தமிழகத்தை சேர்ந்த தலை சிறந்த நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கி இருப்பது அனைவருக்கும் பெருமை நடிகர் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நாராயணசாமி கூறினார் புதுச்சேரியில் கடந்த மூன்று வருடங்களாக மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத துணைநிலை ஆளுநர் கன்படி எந்த திட்டங்களையும் செய்ய விடுவதில்லை இதனால் அவர் தேவையா என கேள்வி எழுப்பினர் அரசு உத்தரவுகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது ஆனால் கிரண் பேடி அரசு உத்தரவுகளை சமூக வலைதளத்தின் மூலம் பிறப்பித்து வருகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்


Conclusion:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு புதுச்சேரி அரசு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.