ETV Bharat / bharat

மழையின் காரணமாக புதுச்சேரியில் வாக்குப்பதிவு மந்தம்! - காமராஜ் நகர் வாக்குப்பதிவு குறைவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கினாலும், மழையின் காரணமாக வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

pudhucherry kamaraj nagar by election poll
author img

By

Published : Oct 21, 2019, 10:18 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கியது. இந்த தொகுதியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 35ஆயிரத்து ஒன்பது வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட ஏழு வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 200 அரசுப் பணியாளர்கள், ஒன்பது பறக்கும் படைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வரிசையில் நின்று வாக்களித்த காமராஜ் நகர் தொகுதி வாக்களார்கள்

மேலும், பாதுகாப்பிற்காக ஒரு கம்பெனி (80 முதல் 100 வீரர்களை கொண்ட குழு) துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்து வருவதால், வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்' - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கியது. இந்த தொகுதியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 35ஆயிரத்து ஒன்பது வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட ஏழு வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 200 அரசுப் பணியாளர்கள், ஒன்பது பறக்கும் படைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வரிசையில் நின்று வாக்களித்த காமராஜ் நகர் தொகுதி வாக்களார்கள்

மேலும், பாதுகாப்பிற்காக ஒரு கம்பெனி (80 முதல் 100 வீரர்களை கொண்ட குழு) துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்து வருவதால், வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்' - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

Intro:புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது சுமார் 600 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் மழையின் காரணமாக மந்தமாக நடக்கிறது


Body:புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது தொடர் மழை நீடிக்கும் நிலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் காமராஜ் நகர் தொகுதியை பொருத்தவரை 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர் இதில் பெண் வாக்காளர்கள் அதிகம் மாற்றுப் பாலினர் ஒருவர் மட்டுமே இந்த தொகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது மொத்தம் உள்ள 32 வாக்குச்சாவடிகளில் 7 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சுமார் 200 அரசுப் பணியாளர்களும் 600க்கு மேற்பட்ட போலீசாரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 9 பறக்கும் படைகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது ரெயின்போ நகர் சிறப்பு பள்ளி பூத்தில் பெண் அதிகாரிகள் பெண் பணியாளர்களை பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

மழையின் காரணமாக வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா கட்சி துண்டு அணிந்து வாக்குச்சாவடிகள் வந்தால் இதற்கு முகவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர் துண்டை எடுத்து விட்டார் தொடர்ந்து வாக்குப்பதிவு மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது


Conclusion:புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று
வருகிறது சுமார் 600 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் மழையின் காரணமாக மந்தமாக நடக்கிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.