ETV Bharat / bharat

பன்முகத்தன்மையைப் போற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடம்!

author img

By

Published : Dec 10, 2020, 3:39 PM IST

Updated : Dec 10, 2020, 7:24 PM IST

பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

கடந்த 1921ஆம் ஆண்டு, பிப்ரவரி 12ஆம் தேதி, கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டிய நாடாளுமன்றக் கட்டடம், காலனி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளதாகவும் எனவே அதற்கு மாற்றாக இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, தரைத்தளம், தரை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்கள் அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது.

விடுதலைக்குப் பிறகான காலத்தில், சுயசார்பு இந்தியக் கொள்கையின் ஒரு அங்கமாக 'மக்களின் நாடாளுமன்றத்தை' கட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

75ஆவது சுதந்திர தினத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை போற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படவுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான கலை, கைவினைப்பொருகள், சிற்பங்கள் ஆகியவை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளன.

புதிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் வரவேற்பறை, தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் அறை ஆகியவை இடம்பெற உள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் கட்டடம் அமையவுள்ளது. மேலும், காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் இந்த கட்டடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வகையில் பிரத்யேக சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள புதிய கட்டடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில், 543 மக்களவை உறுப்பினர்கள், 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது.

தற்போதைய கட்டடத்தில் உள்ள Central hall எனப்படும் மைய மண்டபம், புதிய கட்டடத்தில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளில், 2,000 பேர் நேரடியாகவும் 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபடவுள்ளனர்.

பன்முகத்தன்மையைப் போற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடம்

இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பெரிய அரசியலமைப்பு மன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறைகள், நூலகம், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு என பிரத்யேக அறைகள், உணவருந்தும் அறை, மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவை புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளன.

861.90 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த தற்போதைய கட்டடம் பயன்படுத்தப்படும்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை, டெல்லியில் பல்வேறு கட்டடங்களை வடிவமைத்த எட்வின் லுட்யன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர்தான் வடிவமைத்தார்கள்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பழைய நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள லுட்யன்ஸ்பகுதி வரை பல்வேறு கட்டடங்களைக் கட்ட மத்திய அரசு முன்னதாக முடிவு செய்திருந்தது. ஆனால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில், பல விதி மீறல்கள் இருப்பதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான விசாரணையின் போது, இப்பகுதியில் கட்டடங்களைக் கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டுவது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் மட்டும் நாட்டிக்கொள்ளலாம் என்றும், கட்டடங்களைக் கட்டக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1921ஆம் ஆண்டு, பிப்ரவரி 12ஆம் தேதி, கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டிய நாடாளுமன்றக் கட்டடம், காலனி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளதாகவும் எனவே அதற்கு மாற்றாக இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, தரைத்தளம், தரை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்கள் அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது.

விடுதலைக்குப் பிறகான காலத்தில், சுயசார்பு இந்தியக் கொள்கையின் ஒரு அங்கமாக 'மக்களின் நாடாளுமன்றத்தை' கட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

75ஆவது சுதந்திர தினத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை போற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படவுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான கலை, கைவினைப்பொருகள், சிற்பங்கள் ஆகியவை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளன.

புதிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் வரவேற்பறை, தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் அறை ஆகியவை இடம்பெற உள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் கட்டடம் அமையவுள்ளது. மேலும், காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் இந்த கட்டடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வகையில் பிரத்யேக சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்றக் கட்டடம்

64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள புதிய கட்டடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில், 543 மக்களவை உறுப்பினர்கள், 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது.

தற்போதைய கட்டடத்தில் உள்ள Central hall எனப்படும் மைய மண்டபம், புதிய கட்டடத்தில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளில், 2,000 பேர் நேரடியாகவும் 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபடவுள்ளனர்.

பன்முகத்தன்மையைப் போற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடம்

இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பெரிய அரசியலமைப்பு மன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறைகள், நூலகம், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு என பிரத்யேக அறைகள், உணவருந்தும் அறை, மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவை புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளன.

861.90 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த தற்போதைய கட்டடம் பயன்படுத்தப்படும்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை, டெல்லியில் பல்வேறு கட்டடங்களை வடிவமைத்த எட்வின் லுட்யன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர்தான் வடிவமைத்தார்கள்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பழைய நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள லுட்யன்ஸ்பகுதி வரை பல்வேறு கட்டடங்களைக் கட்ட மத்திய அரசு முன்னதாக முடிவு செய்திருந்தது. ஆனால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில், பல விதி மீறல்கள் இருப்பதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான விசாரணையின் போது, இப்பகுதியில் கட்டடங்களைக் கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டுவது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் மட்டும் நாட்டிக்கொள்ளலாம் என்றும், கட்டடங்களைக் கட்டக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 10, 2020, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.