ETV Bharat / bharat

உலகில் மிக நீளமான சுரங்கப் பாதையின் சிறப்பு என்ன?

author img

By

Published : Oct 3, 2020, 10:29 AM IST

சிம்லா: நாட்டின் மிகச்சிறந்த பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பத்து வருட கடின உழைப்பிற்குப் பிறகு, ரோஹ்தாங் அடல் சுரங்கம் இன்று (அக். 3) திறக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக நீளமான சுரங்கப்பாதையின் சிறப்பு என்ன?
உலகில் மிக நீளமான சுரங்கப்பாதையின் சிறப்பு என்ன?

இமாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 3) திறந்து வைத்தார்.

உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை: மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதை பணி இறுதியாக 10 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்துள்ளது. முதலில் இது 6 ஆண்டுகளில் தயார் செய்யப்படும் என திட்டமிடப்பட்டது. பின்னர் மேலும் 4 ஆண்டுகள் நேரம் தேவைப்படும் என கூறப்பட்டது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை ஆஸ்திரேலிய நிறுவனமான ஸ்னோவி மவுண்டன் இன்ஜினியரிங் நிறுவனம் (எஸ்.எம்.இ.சி) வடிவமைத்துள்ளது.

ரோஹ்தாங் சுரங்கப் பாதை அமைப்பதற்கான முதல் யோசனை மொராவியன் மிஷன் 1860இல் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப் பாதை, கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அடல் சுரங்கப் பாதை 10,000 அடிக்கு மேல் நீளமானது. இது மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ. குறைக்கும். மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கம் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமாகும்.

ஒவ்வொரு 60 மீட்டருக்கும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சுரங்கப் பாதையின் உள்ளே ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசர கால வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை காரணமாக, மணாலி முதல் லே வரையிலான தூரம் 46 கி.மீ. குறைக்கப்படும், இது 4 மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்க தீ ஹைட்ராண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் அகலம் 10.5 மீட்டர். இது இருபுறமும் கட்டப்பட்ட 1 மீட்டர் நடைபாதைகளையும் கொண்டுள்ளது.

உலகில் மிக நீளமான சுரங்கப்பாதை: மோடி இன்று திறந்துவைப்பு!
உலகில் மிக நீளமான சுரங்கப்பாதை: மோடி இன்று திறந்துவைப்பு!

அடல் சுரங்கப் பாதை திட்டத்தின் செலவு 2010இல் 1,700 ரூபாயிலிருந்து 2020 செப்டம்பர் மாதத்திற்குள் 3,200 கோடி ரூபாயாக உயர்ந்தது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், ரோஹ்தாங்கில் ரோப்வே கட்டும் திட்டம் இருந்தது. பின்னர், பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், மணாலிக்கும் லேவுக்கும் இடையில் ஆண்டு முழுவதும் இணைப்பு வழங்குவதற்கான சாலையை நிர்மானிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு ஆட்சியில் இருந்தபோது உறுதியானது. கிழக்கு பிர் பஞ்சால் மலைத்தொடரில் 9.02 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை லே - மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இது சுமார் 10.5 மீட்டர் அகலமும் 5.52 மீட்டர் உயரமும் கொண்டது.

சுரங்கப் பாதையில் ஒரு காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இந்த சுரங்கப் பாதை மணாலியை லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும். இது மணாலி - ரோஹ்தாங் - சர்ச்சு - லே நெடுஞ்சாலையில் 46 கிலோமீட்டர் தூரத்தை குறைக்கும். மேலும் பயண நேரமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறையும்.

இதையும் படிங்க...கோவிட்-19: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

இமாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 3) திறந்து வைத்தார்.

உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை: மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதை பணி இறுதியாக 10 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்துள்ளது. முதலில் இது 6 ஆண்டுகளில் தயார் செய்யப்படும் என திட்டமிடப்பட்டது. பின்னர் மேலும் 4 ஆண்டுகள் நேரம் தேவைப்படும் என கூறப்பட்டது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை ஆஸ்திரேலிய நிறுவனமான ஸ்னோவி மவுண்டன் இன்ஜினியரிங் நிறுவனம் (எஸ்.எம்.இ.சி) வடிவமைத்துள்ளது.

ரோஹ்தாங் சுரங்கப் பாதை அமைப்பதற்கான முதல் யோசனை மொராவியன் மிஷன் 1860இல் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப் பாதை, கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அடல் சுரங்கப் பாதை 10,000 அடிக்கு மேல் நீளமானது. இது மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ. குறைக்கும். மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கம் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமாகும்.

ஒவ்வொரு 60 மீட்டருக்கும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சுரங்கப் பாதையின் உள்ளே ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசர கால வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை காரணமாக, மணாலி முதல் லே வரையிலான தூரம் 46 கி.மீ. குறைக்கப்படும், இது 4 மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்க தீ ஹைட்ராண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் அகலம் 10.5 மீட்டர். இது இருபுறமும் கட்டப்பட்ட 1 மீட்டர் நடைபாதைகளையும் கொண்டுள்ளது.

உலகில் மிக நீளமான சுரங்கப்பாதை: மோடி இன்று திறந்துவைப்பு!
உலகில் மிக நீளமான சுரங்கப்பாதை: மோடி இன்று திறந்துவைப்பு!

அடல் சுரங்கப் பாதை திட்டத்தின் செலவு 2010இல் 1,700 ரூபாயிலிருந்து 2020 செப்டம்பர் மாதத்திற்குள் 3,200 கோடி ரூபாயாக உயர்ந்தது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், ரோஹ்தாங்கில் ரோப்வே கட்டும் திட்டம் இருந்தது. பின்னர், பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், மணாலிக்கும் லேவுக்கும் இடையில் ஆண்டு முழுவதும் இணைப்பு வழங்குவதற்கான சாலையை நிர்மானிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு ஆட்சியில் இருந்தபோது உறுதியானது. கிழக்கு பிர் பஞ்சால் மலைத்தொடரில் 9.02 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை லே - மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இது சுமார் 10.5 மீட்டர் அகலமும் 5.52 மீட்டர் உயரமும் கொண்டது.

சுரங்கப் பாதையில் ஒரு காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இந்த சுரங்கப் பாதை மணாலியை லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும். இது மணாலி - ரோஹ்தாங் - சர்ச்சு - லே நெடுஞ்சாலையில் 46 கிலோமீட்டர் தூரத்தை குறைக்கும். மேலும் பயண நேரமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறையும்.

இதையும் படிங்க...கோவிட்-19: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.