ETV Bharat / bharat

ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ராணுவ வீரர் மாயம் - தேடும் பணி தீவிரம்!

author img

By

Published : Jan 9, 2021, 3:47 PM IST

ஜோத்பூர்: மாயமான துணை ராணுவப்படை கேப்டன் அங்கித் குப்தாவை தேடும் பணி மூன்றாவது நாளாக இன்றும் (ஜனவரி 9) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Paramilitary captain
Paramilitary captain

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தகாத் சாகர் ஏரியில், 10ஆவது துணை ராணுவப்படையைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சிக்காக ஜனவரி 7ஆம் தேதி ஹெலிகாப்டரில் இருந்து குதித்தனர். சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் மூவர் மட்டும் படகு இருக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தனர். ஆனால் கேப்டன் அங்கித் குப்தாவை காணவில்லை.

இதனையடுத்து, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக குப்தாவை தேடிவந்தனர். ஆனால் எந்த ஒரு தடையமும் கிடைக்கவில்லை. குப்தாவை தேடும் பணிக்காக 100க்கும் மேற்பட்ட கடற்படை ராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் குப்தாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேப்டன் குப்தாவின் மனைவி நேற்று மாலை (ஜன.08) ஜோத்பூர் வந்தடைந்தார். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேடும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் ஏரிக்கு வரமுடியாதபடி அப்பகுதி முழுவதும் பேரிகார்டுகள் அமைத்து ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தகாத் சாகர் ஏரியில், 10ஆவது துணை ராணுவப்படையைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சிக்காக ஜனவரி 7ஆம் தேதி ஹெலிகாப்டரில் இருந்து குதித்தனர். சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் மூவர் மட்டும் படகு இருக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தனர். ஆனால் கேப்டன் அங்கித் குப்தாவை காணவில்லை.

இதனையடுத்து, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக குப்தாவை தேடிவந்தனர். ஆனால் எந்த ஒரு தடையமும் கிடைக்கவில்லை. குப்தாவை தேடும் பணிக்காக 100க்கும் மேற்பட்ட கடற்படை ராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் குப்தாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேப்டன் குப்தாவின் மனைவி நேற்று மாலை (ஜன.08) ஜோத்பூர் வந்தடைந்தார். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேடும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் ஏரிக்கு வரமுடியாதபடி அப்பகுதி முழுவதும் பேரிகார்டுகள் அமைத்து ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.