ETV Bharat / bharat

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து - நிதின் கட்கரி விருப்பம்

author img

By

Published : Oct 7, 2020, 5:51 PM IST

புதுச்சேரி: ஒரு கிலோ மீட்டர் நீள ரயில்வே மேம்பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

puthuchery
puthuchery

புதுச்சேரி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் பகுதியில், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 கிலோ மீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

இவ்விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “புதுச்சேரி-விழப்புரம் தேசிய நெடுஞ்சாலை 29 கி.மீ. அளவிற்கு விரைவில் அகலப்படுத்தப்படவுள்ளது. மரக்காணம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 926 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் ராஜீவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் மதிப்பில் 2 கி.மீ. தூரத்திற்கும், இந்திரா காந்தி சதுக்கத்தில் 196 கோடி செலவில் 2 கி.மீ. தூரத்திற்கும், மேம்பாலங்கள் அடுத்தாண்டு அமைக்கப்படும்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்பது எனது கனவு. புதுச்சேரி அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் “ என்றார்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து - நிதின் கட்கரி விருப்பம்

தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “800 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு சார்பாக விழப்புரம்-புதுச்சேரி-காரைக்கால்-நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ராஜீவ், இந்திரா சதுக்கங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் விஜயகுமார் சிங், புதுச்சேரி துணை நிலைஆளுநர் கிரண்பேடி, சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, துணைத்தலைவர் பாலன், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு பழத்தை சாப்பிட்ட மாடு உயிரிழப்பு!

புதுச்சேரி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் பகுதியில், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 கிலோ மீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

இவ்விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “புதுச்சேரி-விழப்புரம் தேசிய நெடுஞ்சாலை 29 கி.மீ. அளவிற்கு விரைவில் அகலப்படுத்தப்படவுள்ளது. மரக்காணம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 926 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் ராஜீவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் மதிப்பில் 2 கி.மீ. தூரத்திற்கும், இந்திரா காந்தி சதுக்கத்தில் 196 கோடி செலவில் 2 கி.மீ. தூரத்திற்கும், மேம்பாலங்கள் அடுத்தாண்டு அமைக்கப்படும்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்பது எனது கனவு. புதுச்சேரி அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் “ என்றார்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து - நிதின் கட்கரி விருப்பம்

தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “800 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு சார்பாக விழப்புரம்-புதுச்சேரி-காரைக்கால்-நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ராஜீவ், இந்திரா சதுக்கங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் விஜயகுமார் சிங், புதுச்சேரி துணை நிலைஆளுநர் கிரண்பேடி, சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, துணைத்தலைவர் பாலன், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு பழத்தை சாப்பிட்ட மாடு உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.