ETV Bharat / bharat

புதுச்சேரியில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்!

புதுச்சேரி: வசிப்பதற்கு மாற்று இடம் கேட்டு புதுச்சேரியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் சமூக நலத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Nov 16, 2019, 2:26 PM IST

pudhucherry

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மதகடிபட்டில் உள்ள வாரச்சந்தை இருக்கும் இடத்தில் 20 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் குடிசை வீடுகளைக் கட்டி வாழ்ந்துவந்தனர். இந்த குடிசைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனால் பாதிப்புக்குள்ளான நரிக்குறவர்கள் தங்களுக்கு மாற்றுஇடம் வழங்கக்கோரியும், தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இன்று புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு மாற்றுவீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி பழங்குடியினர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக நலத் துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துவந்தனர். அதனையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டிலிருந்து வெளிவந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தற்காலிக சுமுகத்தீர்வு ஏற்பட்டதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: 'அடிப்படை வசதிதானே கேக்குறோம்' - நியாயம் கேட்ட வன கிராம மக்கள் மீது வழக்கு!

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மதகடிபட்டில் உள்ள வாரச்சந்தை இருக்கும் இடத்தில் 20 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் குடிசை வீடுகளைக் கட்டி வாழ்ந்துவந்தனர். இந்த குடிசைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனால் பாதிப்புக்குள்ளான நரிக்குறவர்கள் தங்களுக்கு மாற்றுஇடம் வழங்கக்கோரியும், தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இன்று புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு மாற்றுவீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி பழங்குடியினர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக நலத் துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துவந்தனர். அதனையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டிலிருந்து வெளிவந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தற்காலிக சுமுகத்தீர்வு ஏற்பட்டதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: 'அடிப்படை வசதிதானே கேக்குறோம்' - நியாயம் கேட்ட வன கிராம மக்கள் மீது வழக்கு!

Intro:வசிப்பதற்கு மாற்று இடம் கேட்டு புதுச்சேரியை சேர்ந்த நரிக்குறவர்கள் சமூக நலத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகை இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது*
Body:*வசிப்பதற்கு மாற்று இடம் கேட்டு புதுச்சேரியை சேர்ந்த நரிக்குறவர்கள் சமூக நலத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகை இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது*

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த நிலையில் மதகடிப ட்டில் உள்ள வாரச்சந்தைஇருக்கும் இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களின் குடிசை வீடுகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார் இதனால் பாதிப்புக்குள்ளான நரிக்குறவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு மாற்று இடம் கொடுக்கக் கோரியும் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று மனு கொடுத்துள்ளனர் இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இன்று புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் தங்களுக்கு மாற்றுவீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி பழங்குடியினர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வீட்டில் இருந்து வெளிவந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் தற்காலிக சுமுக தீர்வு ஏற்பட்டது அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்Conclusion:வசிப்பதற்கு மாற்று இடம் கேட்டு புதுச்சேரியை சேர்ந்த நரிக்குறவர்கள் சமூக நலத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகை இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது*
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.