ETV Bharat / bharat

ஒரே மாதிரியான 2 கொலைகள்... கிடைத்ததோ ஒரு தடயம்! - நிகழ்த்தியதும் தனி ஒருவனே!

author img

By

Published : Jan 17, 2020, 12:14 PM IST

திருவனந்தபுரம: கேரளத்தில் தனது தாய், நண்பனைக் கொலைசெய்தவரை காவலர்கள் கைதுசெய்தனர். அதுதொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

Kerala man who killed friend to cover up mother's murder
Kerala man who killed friend to cover up mother's murder

2 கொலைகளுக்கு ஒரே தடயம்

கேரள மாநிலம் சாலியம் கடற்கரையில் 2017ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கை, கால், தலை, மூக்கு என மனித உடல் பாகங்கள் கிடைத்தன. எனினும் இந்தக் கொலை வழக்கில் வேறு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. இது நடந்து இரு மாதங்கள் கடக்கும் நிலையில் இதேபோல் மீண்டும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது.

உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. முதல் கொலையை போன்று வேறு எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அதில் காவலர்களுக்கு கிடைத்த ஒரே தடயம், இரு கொலைகளுக்கிடையே இருந்த ஒற்றுமை.

தனி ஒருவன்...!

இந்த நிலையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சரியாக இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கொலையாளியை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

இந்த இரு கொலையையும் ஒருவரே செய்துள்ளார். கொலையாளி கேரள மாநிலம் வடக்கு மானசேரி முக்கம் பகுதியைச் சேர்ந்த பிர்ஜூ (53). இவர் தனது தாயார் ஜெயவள்ளியை (70), நண்பர் இஸ்மாயில் (47) உதவியுடன் தீர்த்துக் கட்டியுள்ளார்.

தாய்க்கு நேர்ந்த கதிதான் நண்பனுக்கும்!

இதற்கு உதவியாக (தாயை கொலைசெய்வதற்கு) இருக்கும்பட்சத்தில் பெருமளவு பணம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் நாள்கள் செல்ல செல்ல பணம் கொடுக்காமல் பிர்ஜூ ஏமாற்றிவந்தார். இதையடுத்து பிர்ஜூவை இஸ்மாயில் மிரட்டத் தொடங்கினார்.

தாய், நண்பனை கொலை செய்த முதியவர் கைது

இதனால் ஆத்திரமடைந்த பிர்ஜூ, இஸ்மாயிலை இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கொலைசெய்தார். இதையடுத்து, கேரளத்தில் உள்ள நிலங்களை விற்றுவிட்டு, நீலகிரி வந்துவிட்டார். இந்த நிலையில்தான் காவலர்கள் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: கொலை செய்துவிட்டு பொங்கல் கொண்டாடிய தொழிலாளி கைது

2 கொலைகளுக்கு ஒரே தடயம்

கேரள மாநிலம் சாலியம் கடற்கரையில் 2017ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கை, கால், தலை, மூக்கு என மனித உடல் பாகங்கள் கிடைத்தன. எனினும் இந்தக் கொலை வழக்கில் வேறு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. இது நடந்து இரு மாதங்கள் கடக்கும் நிலையில் இதேபோல் மீண்டும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது.

உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. முதல் கொலையை போன்று வேறு எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அதில் காவலர்களுக்கு கிடைத்த ஒரே தடயம், இரு கொலைகளுக்கிடையே இருந்த ஒற்றுமை.

தனி ஒருவன்...!

இந்த நிலையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சரியாக இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கொலையாளியை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

இந்த இரு கொலையையும் ஒருவரே செய்துள்ளார். கொலையாளி கேரள மாநிலம் வடக்கு மானசேரி முக்கம் பகுதியைச் சேர்ந்த பிர்ஜூ (53). இவர் தனது தாயார் ஜெயவள்ளியை (70), நண்பர் இஸ்மாயில் (47) உதவியுடன் தீர்த்துக் கட்டியுள்ளார்.

தாய்க்கு நேர்ந்த கதிதான் நண்பனுக்கும்!

இதற்கு உதவியாக (தாயை கொலைசெய்வதற்கு) இருக்கும்பட்சத்தில் பெருமளவு பணம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் நாள்கள் செல்ல செல்ல பணம் கொடுக்காமல் பிர்ஜூ ஏமாற்றிவந்தார். இதையடுத்து பிர்ஜூவை இஸ்மாயில் மிரட்டத் தொடங்கினார்.

தாய், நண்பனை கொலை செய்த முதியவர் கைது

இதனால் ஆத்திரமடைந்த பிர்ஜூ, இஸ்மாயிலை இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கொலைசெய்தார். இதையடுத்து, கேரளத்தில் உள்ள நிலங்களை விற்றுவிட்டு, நீலகிரி வந்துவிட்டார். இந்த நிலையில்தான் காவலர்கள் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: கொலை செய்துவிட்டு பொங்கல் கொண்டாடிய தொழிலாளி கைது

Intro:MukkomBody:ArrestConclusion:Crime branch

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.