ETV Bharat / bharat

”பீகாரில் இறந்த தாய்; டெல்லியில் தவிக்கும் மகன்” அரசு உதவுமா?

author img

By

Published : Mar 31, 2020, 11:42 AM IST

டெல்லி: ஊரடங்கு உத்தரவால் உயிரிழந்த தனது தாயை காண உதவுமாறு பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கதறி அழும் திப்பு யாதவ்
கதறி அழும் திப்பு யாதவ்

கரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால், இந்தியா முழுவதும் கடந்த வாரம் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வரும் பீகார் பாகல்பூரைச் சேர்ந்த திப்பு யாதவ் என்பவர் புலம் பெயர்ந்த தொழிலாளி. இந்நிலையில் இவரது தாயார் அவரது சொந்த ஊரில் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது கிராமத்திற்குச் செல்ல உதவுமாறு அழுது கொண்டிருக்கிறார்.

பின் இது குறித்து அவர் ஏ.என்.ஐவிடம் கூறியதாவது; "என் அம்மா இறந்துவிட்டார். இந்த ஊரடங்கு உத்தரவால், நான் இங்கே சிக்கிக்கொண்டேன். நான் இப்போது என் கிராமத்திற்குச் செல்லவேண்டும். நான் ஏழை, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று கூறினார். மேலும் என் தந்தையும், எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தில் எனக்காக காத்திருக்கின்றனர் என்றார். ஒரு வாகனம் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று இறக்கிவிடும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த வாரம் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தினசரி கூலித் தொழிலாளர்களாக உள்ள நிலையில் தங்கள் வாழ்வாதாரம் குறித்த நிச்சயமற்ற சூழலில், பல்வேறு மாநிலங்களிலங்களிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக விரைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் நேற்று வரை 1,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானத்தில் பயணித்த நபருக்கு கரோனா - விஸ்தாராவின் முக்கிய முடிவு!

கரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால், இந்தியா முழுவதும் கடந்த வாரம் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வரும் பீகார் பாகல்பூரைச் சேர்ந்த திப்பு யாதவ் என்பவர் புலம் பெயர்ந்த தொழிலாளி. இந்நிலையில் இவரது தாயார் அவரது சொந்த ஊரில் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது கிராமத்திற்குச் செல்ல உதவுமாறு அழுது கொண்டிருக்கிறார்.

பின் இது குறித்து அவர் ஏ.என்.ஐவிடம் கூறியதாவது; "என் அம்மா இறந்துவிட்டார். இந்த ஊரடங்கு உத்தரவால், நான் இங்கே சிக்கிக்கொண்டேன். நான் இப்போது என் கிராமத்திற்குச் செல்லவேண்டும். நான் ஏழை, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று கூறினார். மேலும் என் தந்தையும், எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தில் எனக்காக காத்திருக்கின்றனர் என்றார். ஒரு வாகனம் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று இறக்கிவிடும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த வாரம் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தினசரி கூலித் தொழிலாளர்களாக உள்ள நிலையில் தங்கள் வாழ்வாதாரம் குறித்த நிச்சயமற்ற சூழலில், பல்வேறு மாநிலங்களிலங்களிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக விரைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் நேற்று வரை 1,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானத்தில் பயணித்த நபருக்கு கரோனா - விஸ்தாராவின் முக்கிய முடிவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.