ETV Bharat / bharat

மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு!

author img

By

Published : Apr 26, 2020, 11:44 AM IST

சண்டிகர்: கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டுவர ஆலோசனைகள் வழங்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழுவைப் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.

Montek Ahluwalia
Montek Ahluwalia

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பின் மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு தொழில் துறையைப் புதுப்பிப்பது குறித்த திட்டங்களை வகுக்க வல்லுநர் குழுவை அமைக்கவுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

பல்வேறு பொருளாதார மற்றும் தொழில் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அடுத்த ஓர் ஆண்டில் செய்ய வேண்டிய குறுகிய காலத் திட்டம், நிதி மேலாண்மை உள்ளிட்ட நடுத்தர கால திட்டங்களையும் பரிந்துரைக்கும்.

இந்நிலையில், 20 வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக கலைக்கப்பட்ட திட்டக்குழுவின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். வல்லுநர் குழுவை தலைமை தாங்க தங்கள் அழைப்பை ஏற்றதற்கு அலுவாலியாவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு தனது முதல் பரிந்துரைகளை ஜூலை 31ஆம் தேதி அரசுக்கு அளிக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் இரண்டாவது, மூன்றாவது பரிந்துரைகளை மாநில அரசுக்கு வல்லுநர் குழு அளிக்கவுள்ளது.

முதல், இரண்டாவது பரிந்துரைப் பட்டியலை அளிக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளதால், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய இந்தக் கால இடைவெளி உதவும் என்று அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாபின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவும் முக்கிய நடவடிக்கைகளை அடையாளம் காணும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு தனக்குத் தேவையான மற்ற வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீதித்துறை அத்தியாவசிய சேவையில் சேராதா? - கபில் சிபல் காட்டம்

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பின் மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு தொழில் துறையைப் புதுப்பிப்பது குறித்த திட்டங்களை வகுக்க வல்லுநர் குழுவை அமைக்கவுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

பல்வேறு பொருளாதார மற்றும் தொழில் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அடுத்த ஓர் ஆண்டில் செய்ய வேண்டிய குறுகிய காலத் திட்டம், நிதி மேலாண்மை உள்ளிட்ட நடுத்தர கால திட்டங்களையும் பரிந்துரைக்கும்.

இந்நிலையில், 20 வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக கலைக்கப்பட்ட திட்டக்குழுவின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். வல்லுநர் குழுவை தலைமை தாங்க தங்கள் அழைப்பை ஏற்றதற்கு அலுவாலியாவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு தனது முதல் பரிந்துரைகளை ஜூலை 31ஆம் தேதி அரசுக்கு அளிக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் இரண்டாவது, மூன்றாவது பரிந்துரைகளை மாநில அரசுக்கு வல்லுநர் குழு அளிக்கவுள்ளது.

முதல், இரண்டாவது பரிந்துரைப் பட்டியலை அளிக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளதால், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய இந்தக் கால இடைவெளி உதவும் என்று அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாபின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவும் முக்கிய நடவடிக்கைகளை அடையாளம் காணும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு தனக்குத் தேவையான மற்ற வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீதித்துறை அத்தியாவசிய சேவையில் சேராதா? - கபில் சிபல் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.