ETV Bharat / bharat

சென்னையை கலக்கிய மோடி!

author img

By

Published : Sep 30, 2019, 3:15 PM IST

சென்னை: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

Modi

ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று வந்திருந்தார். இவரின் வருகையால் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தனி விமானம் மூலம் மோடி டெல்லி புறப்பட்டார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் சிறப்பான உரையாற்றிய மோடி, "நம் நாட்டின் தொழில்நுட்பம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதாக இருப்பதால் அதனை உலகம் விரைவில் பயன்படுத்தும். தொழில்நுட்பத்தில் இந்தியா, சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுகிறது" என்றார்.

மோடியின் வருகையால் ட்விட்டரில் எப்போதும்போல் #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. பிரதமர் மோடியுடனான சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி மீண்டும் சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று வந்திருந்தார். இவரின் வருகையால் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தனி விமானம் மூலம் மோடி டெல்லி புறப்பட்டார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் சிறப்பான உரையாற்றிய மோடி, "நம் நாட்டின் தொழில்நுட்பம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதாக இருப்பதால் அதனை உலகம் விரைவில் பயன்படுத்தும். தொழில்நுட்பத்தில் இந்தியா, சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுகிறது" என்றார்.

மோடியின் வருகையால் ட்விட்டரில் எப்போதும்போல் #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. பிரதமர் மோடியுடனான சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி மீண்டும் சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.09.19

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை கொண்டது தமிழகம்.. பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பின் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை ஐ.ஐ.டி யில் நடைபெற்ற 56 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னை கிண்டிகு வந்திருந்தார். நிகழ்ச்சியில்,
ஐ.ஐ.டி யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐ.ஐ.டி யின் வளர்ச்சி மற்றும் அதன் சாதனைகள் குறித்து பேசினார். பின்னர் பேசிய மஹிந்ரா & மஹிந்ரா நிறுவன தலைவர் பவான் கோங்கா மாணவர்களுக்கான வாழ்த்து உரையாற்றினார்..

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, என் எதிரில் அமர்ந்துள்ள இளம் நண்பர்களே, பெற்றோர்கள் உங்களை வளர்க்க நிறைய சிரமங்கள் படுவதோடு பல இன்னல்களை தாங்கிக்கொள்கின்றனர். நீங்கள் இந்த உலகில் நல்ல குடிமக்களாக வர வேண்டும் என்பதற்காக.. இந்தியாவின் தொழில்நுட்பம் சிறப்பானது மட்டுமல்லாமல் தனித்துவமானது என்பதால் இந்திய தொழில்நுட்பத்தை இந்த உலகை விரைவில் பயன்படுத்தும்..

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை கொண்டது தமிழகம்.. இப்போது தான் அமெரிக்காவிலிருந்து வந்தேன் பலரை சந்தித்தேன்.. புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக.. அறிவியல் உள்ளிட்ட புதிய கண்டுபிடிபுகளில் நாம் சிறந்து விளங்க வேண்டும்..
தொழில்நுட்பத்தில் இந்தியா, சிக்கப்பூருடன் இணைந்து பணியாற்றுகிறது..
உங்களுக்கான பிரமாதமான வாய்ப்புகள் காத்திருக்கிறது. நீங்கள் எத்தனை உயரம் சென்றாலும் தாய் நாட்டை விட்டுக் கொடுக்காதீர்கள் என்றார்..

tn_che_02_pm_modi_speech_of_convocation_function_of_iit_chennai_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.