ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை அடுத்துள்ளளது ராச்சப்பள்ளி கிராமம். இப்பகுதியில் வசித்துவரும் தேரங்குலா ரவி என்பவர் அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பகவத் கீதையை கற்றுத் தந்துவருகிறார்.
அவரிடம் பகவத் கீதை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை(நவம்பர் 28) மதியம் தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார். தேர்வு முடிந்த பின், அங்கிருந்த மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டிஎஸ்பி வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மதபோதகர் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டைவிட்டு வெளியேறிய கன்னட பெண்ணுக்கு உத்தரகாண்டில் நிகழ்ந்த கொடூரம்..!