சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், கூட்டணி கட்சிகளின் பல மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சங்ராம் தோராட்டுக்கு அமைச்சர் பதவி அளிக்காததால் அவரின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து அமைச்சர் பாலாசாகேப் தோரத், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் அமைச்சராவதற்கு விரும்புகின்றனர். விரைவில், இந்தப் பிரச்னை தீர்க்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஒரு குழப்பமான கட்சி :பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம்