கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா காவல் நிலையத்துக்குட்பட்ட விப்ரோ சிக்னல் அருகே உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் நேற்று மாலை 7:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உணவகத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தினால் உணவகத்திலிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதில் 15க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காயமுற்றனர். சமையல் எரிவாயு குழாய் (கியாஸ் சிலிண்டர்) வெடித்துச் சிதறியதில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிருஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து கோரமங்கலா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.