சூடான் நாட்டில் தொழிற்சாலையில் எல்.பி.ஜி. டேங்கர் வெடித்து சிதறியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள். இந்த விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
அவர் பேசியதாவது, '' சூடானில் 18 இந்தியர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் 3) உயிரிழந்தனர். அதில் 6 பேர் தமிழர்கள். அவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு, அவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் '' என்றார்.
இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - தமிழர்களை மீட்க பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!