கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகேஷ், அமுல்யா காதல் ஜோடி. நேற்று முன்தினம் (பிப். 02) இவர்கள் இருவரும் மைசூருவில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (பிப். 03) மாலை விடுதி ஊழியர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டிய போது கதவை திறக்காததால், இது குறித்து விடுதி மேலாளருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.என்.பிரகாஷ் தலைமையிலான காவலர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் தூக்கில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதையடுத்து, காதல் ஜோடியின் உடலைக் கைப்பறிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஹெபல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!