பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையில், ஆர்ஜேடி, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அங்கு தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் பணிகள் இப்போதிருந்தே அங்கு சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
இதனிடையே, வரக்கூடிய பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக புஷ்பா பிரியா சவுத்ரி என்ற இளம்பெண் பத்திரிகைகளில் விளம்பரங்களைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவர் பினோத் சவுத்ரியின் மகளாவார்.
தான் தனியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கி, அதன்மூலம் பிகாரின் அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடப் போவதாகவும், தானே முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Bihar needs pace, Bihar needs wings, Bihar needs change. Because Bihar deserves better and better is possible. Reject bullshit politics, join Plurals to make Bihar run and fly in 2020. #PluralsHasArrived #ProgressiveBihar2020 pic.twitter.com/GiQU00oiJv
— Pushpam Priya Choudhary (@pushpampc13) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bihar needs pace, Bihar needs wings, Bihar needs change. Because Bihar deserves better and better is possible. Reject bullshit politics, join Plurals to make Bihar run and fly in 2020. #PluralsHasArrived #ProgressiveBihar2020 pic.twitter.com/GiQU00oiJv
— Pushpam Priya Choudhary (@pushpampc13) March 8, 2020Bihar needs pace, Bihar needs wings, Bihar needs change. Because Bihar deserves better and better is possible. Reject bullshit politics, join Plurals to make Bihar run and fly in 2020. #PluralsHasArrived #ProgressiveBihar2020 pic.twitter.com/GiQU00oiJv
— Pushpam Priya Choudhary (@pushpampc13) March 8, 2020
ஏற்கனவே நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கூறப்பட்டுவரும் நிலையில், இவரின் இந்த விளம்பரம் ஜனதா தளம் கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியா சவுத்ரி தற்போது லண்டனில் வசித்துவருகிறார்.
இதையும் படிங்க: பிகார் தேர்தல்: யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?