ஸ்ரீநகரை தலைமை இடமாகக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மாநில கொடிகள் நீக்கப்பட்டு, தேசிய கோடி மட்டுமே பறக்க விடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் நாள் சட்டப்பிரிவு 370 நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் நிர்மல் சிங்க் அவரது வாகனத்தில் இருந்த மாநில கொடியை நீக்கினார்.
தங்கள் வாழ்வில் இது முக்கிய நாள் ஒரு நாடு, ஒரு கொடி, ஒரு பிரதமர் என பாஜக அரசுக்கு ஆதரவாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சிங்க் தெரிவித்தார்.
இந்நிலை கடந்த வாரங்கள் தலைமைச் செயலங்களில் காணப்பட்ட மாநில கொடிகள் முழுவதும் நேற்று நீக்கப்பட்டு, மூவர்ண கொடிகள் மட்டுமே பறக்க விடப்பட்டுள்ளன.