பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (செப். 15) ராஜௌரி மாவட்டத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான சுந்தர்பானி துறையில் விதிமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விதிமீறி தாக்குதல் நடத்தியது.
இந்தச் சம்பவத்தின்போது நாயக் அனீஷ் தாமஸ் என்ற வீரர் பலத்த காயமடைந்த நிலையில் நேற்று வீரமரணமடைந்தார்.
நாயக் அனீஷ் தாமஸ் ஒரு தைரியமான மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் வீரர். இவருடைய தியாகத்தை நாடு எந்நாளும் போற்றி வணங்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.