புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு எந்தவித உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க மறுக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட வேண்டிய மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்த உள்ளதாக மோடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த நிதியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது இந்த நிதியை நிறுத்துவது என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அதனால் பிரதமர் மோடி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு