ETV Bharat / bharat

லடாக் எல்லைப் பிரச்னை : அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்திய, சீன ராணுவங்கள்

author img

By

Published : Jun 9, 2020, 8:30 PM IST

டெல்லி : இந்தியா - சீனா இடையே நிலவி வரும் லடாக் எல்லை பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரும் சூழலில், இன்னும் சில நாட்களில் இந்திய ராணுவக் குழு ஒன்று எதிர் தரப்புடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

china india dispute
china india dispute

லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தப் பிரச்னையை சமூகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இந்திய ராணுவக் குழு ஒன்று எதிர்த்தரப்புடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூஷில் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள், இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இந்திய ராணுவத் துணை தளபதி ஹரிந்தர் சிங், சீன ராணுவத் துணை தளபதி லியூ லின் இடையே கடந்த ஆறாம்ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, தீர்வு ஏதும் எட்டப்படாத போதிலும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டது.

இதனிடையே, இந்திய - சீன எல்லை விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டின் சுய மரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'

லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தப் பிரச்னையை சமூகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இந்திய ராணுவக் குழு ஒன்று எதிர்த்தரப்புடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூஷில் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள், இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இந்திய ராணுவத் துணை தளபதி ஹரிந்தர் சிங், சீன ராணுவத் துணை தளபதி லியூ லின் இடையே கடந்த ஆறாம்ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, தீர்வு ஏதும் எட்டப்படாத போதிலும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டது.

இதனிடையே, இந்திய - சீன எல்லை விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டின் சுய மரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.