அஸ்ஸாம் மாநிலம் திஸ்சுகியா மாவட்டத்தில் உள்ள லோடோ பகுதி அருகே பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக அம்மாநில காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்துடன் சேர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ராம்போங் ஹாகுன் ஜானி, கோசுங் சங்கே ஆகிய இருவரைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 'நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து' என்ற பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புடையவர்கள் என அஸ்ஸாம் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிடிபட்ட இரண்டு பயங்கரவாதிகளும் உப்பர் அஸ்ஸாம் பகுதியில் பயங்கரவாத, பணம் பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிகிறது.
அவர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மி.மி. பிஸ்டல், 22 ஒன் பாயிண்ட் பிஸ்டல், 10 தோட்டாக்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இருவரும் லோடோ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு நோட்டீஸ்!